மேலும் அறிய

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; இன்றைய நிலை என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது 27 வயது மகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; இன்றைய நிலை என்ன?

கோவையில் கொரோனா பாதிப்பு நிலைமையை விளக்கும் வகையில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அப்பா, அம்மா இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது 27 வயது மகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வெண்டிலேட்டர் கொடுத்தால் தான் காப்பாற்ற முடியுமென்ற நிலை இருந்தது. அம்மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியில்லை என்பதால், வேறு எங்காவது முயற்சித்து பாருங்கள் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் வெண்டிலேட்டர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டனர். பல இடங்களில் முயற்சித்தும், வெண்டிலேட்டர் கிடைக்கவில்லை. அதனால் அந்த இளைஞரை காப்பாற்ற முடியவில்லை. இது தான் கோவையின் நிலை.

குடும்பம் குடும்பாக மக்கள் அழிந்து போகும் சூழ்நிலையை தடுத்து நிறுத்த முடியாமல் மனக்கஷ்டத்துடன் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. எதுவும் செய்ய முடியவில்லை. மக்களைக் காப்பாற்ற கடவுள் வருவாரா? அரசு செய்யுமா? மாயஜாலம் நடந்து எல்லாம் மாறும் என நினைக்க முடியாது. அதேபோல அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதற்கு மேலும் சுமை கொடுத்தால் மருத்துவமனை சம்பித்து விடும். யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; இன்றைய நிலை என்ன?

இதனை சமாளிக்க இருக்க ஒரே வாய்ப்பு தொற்று ஏற்படாமல் குறைக்க வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பு தனி மனிதர் கைகளில் தான் உள்ளது. ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று ஏற்பட்டவர்கள் வாய்ப்புள்ள வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஒரு படுக்கையறை, கழிவறை மட்டும் தான் உள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்த வாய்ப்பில்லை. கிராமங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசுப்பள்ளி, சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்களை தனிமைப்ப்படுத்தும் மையங்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அம்மையங்கள் அமைக்க வேண்டும். அப்போது தான் தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து காப்பாற்ற முடியும்.

ஒருவர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 3 முதல் 5 இலட்சம் இல்லாமல் வெளியே வர முடியாது. ஒரு குடும்பத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டால் 20 இலட்ச ரூபாய் வேண்டும். இதனை சாதாரண குடும்பங்களால் எப்படி சமாளிக்க முடியும்?. ரேசன் கடை, தடுப்பூசி மையம், பரிசோதனை மையம், காய்கறி விற்பனை வாகனங்கள் ஆகிய இடங்களில் மக்கள் முண்டியத்து நிற்கின்றனர். அவை அவசிய தேவை என்றாலும், மக்கள் 2 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும். தொற்று பாதிப்பு 5 ஆயிரம், 10 ஆயிரம் என வந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். தெருவில் மக்கள் செத்து விழும் நிலை ஏற்படும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிமனிதரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நம் உயிர். நம் கையில்" என அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

விஜய் பிரதமர் வேட்பாளர்? - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?
விஜய் பிரதமர் வேட்பாளர்? - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?
coimbatore power cut: கோவையில் இன்று (05-09-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் இன்று (05-09-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மேட்டுப்பாளையம் டூ அவிநாசி பயணம் செய்ய போறீங்களா? முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க!
மேட்டுப்பாளையம் டூ அவிநாசி பயணம் செய்ய போறீங்களா? முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க!
coimbatore power cut: கோவையில் நாளை (05-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget