மேலும் அறிய

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; இன்றைய நிலை என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது 27 வயது மகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; இன்றைய நிலை என்ன?

கோவையில் கொரோனா பாதிப்பு நிலைமையை விளக்கும் வகையில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அப்பா, அம்மா இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது 27 வயது மகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வெண்டிலேட்டர் கொடுத்தால் தான் காப்பாற்ற முடியுமென்ற நிலை இருந்தது. அம்மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியில்லை என்பதால், வேறு எங்காவது முயற்சித்து பாருங்கள் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் வெண்டிலேட்டர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டனர். பல இடங்களில் முயற்சித்தும், வெண்டிலேட்டர் கிடைக்கவில்லை. அதனால் அந்த இளைஞரை காப்பாற்ற முடியவில்லை. இது தான் கோவையின் நிலை.

குடும்பம் குடும்பாக மக்கள் அழிந்து போகும் சூழ்நிலையை தடுத்து நிறுத்த முடியாமல் மனக்கஷ்டத்துடன் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. எதுவும் செய்ய முடியவில்லை. மக்களைக் காப்பாற்ற கடவுள் வருவாரா? அரசு செய்யுமா? மாயஜாலம் நடந்து எல்லாம் மாறும் என நினைக்க முடியாது. அதேபோல அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதற்கு மேலும் சுமை கொடுத்தால் மருத்துவமனை சம்பித்து விடும். யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; இன்றைய நிலை என்ன?

இதனை சமாளிக்க இருக்க ஒரே வாய்ப்பு தொற்று ஏற்படாமல் குறைக்க வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பு தனி மனிதர் கைகளில் தான் உள்ளது. ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று ஏற்பட்டவர்கள் வாய்ப்புள்ள வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஒரு படுக்கையறை, கழிவறை மட்டும் தான் உள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்த வாய்ப்பில்லை. கிராமங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசுப்பள்ளி, சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்களை தனிமைப்ப்படுத்தும் மையங்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அம்மையங்கள் அமைக்க வேண்டும். அப்போது தான் தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து காப்பாற்ற முடியும்.

ஒருவர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 3 முதல் 5 இலட்சம் இல்லாமல் வெளியே வர முடியாது. ஒரு குடும்பத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டால் 20 இலட்ச ரூபாய் வேண்டும். இதனை சாதாரண குடும்பங்களால் எப்படி சமாளிக்க முடியும்?. ரேசன் கடை, தடுப்பூசி மையம், பரிசோதனை மையம், காய்கறி விற்பனை வாகனங்கள் ஆகிய இடங்களில் மக்கள் முண்டியத்து நிற்கின்றனர். அவை அவசிய தேவை என்றாலும், மக்கள் 2 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும். தொற்று பாதிப்பு 5 ஆயிரம், 10 ஆயிரம் என வந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். தெருவில் மக்கள் செத்து விழும் நிலை ஏற்படும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிமனிதரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நம் உயிர். நம் கையில்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
Iran TV Anchor Cries: கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
Embed widget