போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் - CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம்.

மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற இருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈரானில் கடும் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ படைகள் இணைந்து ஈரான் மீது நேற்று (பிப். 28) திடீரென ராணுவத் தாக்குதலை நடத்தின. இந்த நிலையில், அந்நாட்டின் அதி உயர் தலைவரான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலகப் போர் உருவாகி விடுமோ என்ற அச்சமும் சாமானிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போர் நடந்து வரும் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்கெங்கே தேர்வுகள் ஒத்தி வைப்பு?
பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் நாளை (மார்ச் 2ஆம் தேதி) 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 3ம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மீண்டும் ஆலோசித்து மார்ச் 5ம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தேர்வுகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உலகம் முழுவதும் 28 நாடுகளில் 240 பள்ளிகளைக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























