மேலும் அறிய

DGP Sylendra Babu warns: தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த தமிழக டி.ஜி.பி..!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்

பாஜகவினரின் இடங்களில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை உள்ளிட்ட இடங்களில் பாஜக, இந்து அமைப்பினர் உள்ளிட்டவர்களின் இடங்களில் பொட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைகிறார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்ய தனிப்படைகள்:

அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யட்டுள்ளன.

கூடுதல் காவல்துறையினர்:

கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள். சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.பி.தாமரைக்கண்ணன், இகாப, அங்கு முகாமிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: Crime : அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு..! தமிழ்நாட்டில் தலைதூக்குகிறதா வன்முறை..? என்ன செய்கிறது காவல்துறை...?

Also Read: Crime : மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு ! தமிழ்நாட்டில் தொடரும் பதற்றம்..! அச்சத்தில் மக்கள்..!

தலைப்பு செய்திகள்

காதலனுடன் சொகுசு கார் வாங்க பிளான் !! 4 - பவுன் நகையை பறித்த MBA கல்லூரி மாணவி
காதலனுடன் சொகுசு கார் வாங்க பிளான் !! 4 - பவுன் நகையை பறித்த MBA கல்லூரி மாணவி
விஜய் பிரதமர் வேட்பாளர்? - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?
விஜய் பிரதமர் வேட்பாளர்? - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?
coimbatore power cut: கோவையில் இன்று (05-09-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் இன்று (05-09-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மேட்டுப்பாளையம் டூ அவிநாசி பயணம் செய்ய போறீங்களா? முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க!
மேட்டுப்பாளையம் டூ அவிநாசி பயணம் செய்ய போறீங்களா? முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan : பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
Chennai New Airport : பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
Chennai Airport: புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
Diwali Train Reservation : தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
Maruti Baleno: 30KM மைலேஜ் - லெவல் 2 ADAS, வெண்டிலேடட் இருக்கைகள், களைகட்டும் ப்ரீமியம் கார் - விலை, வசதிகள் எப்படி?
30KM மைலேஜ் - லெவல் 2 ADAS, வெண்டிலேடட் இருக்கைகள் - களைகட்டும் ப்ரீமியம் கார் - விலை, வசதிகள் எப்படி?
Embed widget