மேலும் அறிய

வியக்க வைக்கும் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் - பராமரிப்பின்றி அழியும் அவலம்..!

வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளிலும், அதையொட்டிய வனங்களும் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இங்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களை யானைகளை பிடித்து பழக்கப்படுத்தி பயன்படுத்தியதற்கான வரலாற்று சான்றாய், பதிமலை விளங்குகிறது. தமிழக-கேரள எல்லையோரத்தில் உள்ள வேலந்தாவளம் அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில், பதிமலை என்ற பாறைக் குன்று உள்ளது. முருகன் கோயிலையொட்டி அமைந்துள்ள இந்த குன்று, கீழ் பகுதியில் பல குகைகளைக் கொண்டுள்ளது. அதில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்த குகைகளில் பல பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.


வியக்க வைக்கும் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் - பராமரிப்பின்றி அழியும் அவலம்..!

வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு உதாரணமாக கூறப்படுகிறது. மேலும் திருவிழாவினை காட்சிப்படுத்தும் வகையில் தேரினை வடம் பிடித்து இழுக்கும் ஓவியங்களும் காணப்படுகின்றன.


வியக்க வைக்கும் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் - பராமரிப்பின்றி அழியும் அவலம்..!

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”வேளம் என்றால் யானை எனவும், தாவளம் என்றால் சந்தை எனவும் பொருள்படும். வேலந்தாவளம் என்பது யானைச்சந்தையை குறிக்கும் ஊர் பெயர் என அறியப்படுகிறது. அருகேயுள்ள மாவூத்தம்பதி என்பது யானைப்பாகன்கள் வசிப்பிடமாக இருந்துள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் கொப்பம் என்ற குழிகளை ஏற்படுத்தி யானைகளை பிடித்துள்ளனர் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. யானைகளை மனிதர்கள் கட்டுப்படுத்தி வாழ்ந்ததையே குமிட்டிபதி பாறை ஓவியம் விளக்குகிறது. யானைகளை விற்கும் இடமாகவும், பழக்கப்படுத்தும் இடமாகவும் இந்த பகுதிகள் இருந்துள்ளன. இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பழமையான பாறை ஓவியம்” எனத் தெரிவித்தனர்.


வியக்க வைக்கும் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் - பராமரிப்பின்றி அழியும் அவலம்..!

தொடர்ந்து பேசிய அவர்கள், “தமிழகத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பலவும் எளிதில் பார்க்க முடியாத வகையில் அடர்ந்த காடுகளுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் குமிட்டிப்பதியில் உள்ள பாறை ஓவியம் எளிதில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதுவே பதிமலை பாறை ஓவியங்களுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. இந்த குகைகள் சமையலுக்கான இடமாகவும், மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் இருக்கிறது. கரிக்கோடுகளால் கிறுக்குதல், பெயர்களை எழுதுதல் ஆகியவற்றாலும், சமையல் செய்வதால் ஏற்படும் புகையாலும் ஓவியங்கள் அழிந்து வருகின்றன. இந்த பாறை ஓவியங்களின் சிறப்புகள் குறித்த எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால், பலரும் அறியாமல் வரலாறு சிறப்புமிக்க சின்னங்களை சேதப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பல ஓவியங்கள் அழிந்து உள்ளன. அழியும் நிலையில் மீதமுள்ள பாறை ஓவியங்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

குமிட்டிபதி பாறை ஓவியங்களை புனரமைத்து பாதுகாத்தால் ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget