மேலும் அறிய

வித்தியாசம் வித்தியாசமா தங்கம் கடத்துறாங்கப்பா.. இருவரை கைது செய்தது சுங்கத்துறை

துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட 1.85 கிலோ தங்க பசை, தங்க செயின்கள் சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை.
 

வித்தியாசம் வித்தியாசமா தங்கம் கடத்துறாங்கப்பா..  இருவரை கைது செய்தது சுங்கத்துறை
இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்த போது, அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பார்சல்களை கைப்பற்றினார்கள். பாா்சல்களை  திறந்து பார்த்த போது, அதனுள்  தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். மூன்று பார்சல்களிலும்,1.036 கிலோ தங்கப்பசை இருந்ததை பறிமுதல் செய்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 46.15 லட்சம். இதையடுத்து சிவகங்கை  பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

வித்தியாசம் வித்தியாசமா தங்கம் கடத்துறாங்கப்பா..  இருவரை கைது செய்தது சுங்கத்துறை
இதற்கிடையே துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது, உடைமைகளுக்குள்  தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தங்க செயின்களின் மொத்த எடை 814 கிராம். அதன் சர்வதேச மதிப்புரூபாய் 36.26 லட்சம்.இதையடுத்து அந்த பயணியையும்  சுங்க அதிகாரிகள் கைது செய்து, தங்க செயின்களை பறிமுதல் செய்தனர். 

வித்தியாசம் வித்தியாசமா தங்கம் கடத்துறாங்கப்பா..  இருவரை கைது செய்தது சுங்கத்துறை
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து துபாயிலிருந்து வந்த இரண்டு  விமானங்களை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், சிவகங்கை, சென்னை ஆகிய இரண்டு பயணிகளிடமிருந்து  ரூபாய் 82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்க பசை மற்றும் தங்க செயின்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இரண்டு பயணிகளையும்  கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
மற்றொரு சம்பவம்
 
சிடி பிளேயரில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் சுமார் 17.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தார் . அவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல அதே பயணியிடம் சுமார் 3.15 லட்சம் மதிப்புள்ள சிகரெட்  செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று  நடத்திய சோதனையில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து வரப்பட்ட 23.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget