மேலும் அறிய

Vijayakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க - கண்ணீர் மல்க விஜய பிரபாகரன் கோரிக்கை

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார். 

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். திரைத்துறை சார்பிலும் பல்வேறு முக்கிய நபர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன், கண்ணீர் மல்க பேசியது சுற்றியிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சில நிமிடங்கள் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினர். அவர் தனது பேச்சின்போது, “பேரன்பு கொண்ட பெரியோர்களே,தாய்மார்களே, அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே,இளைஞர்களே, பொதுமக்களே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே மற்றும் திரையுலக பிரமுகர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சொல்லின் சொந்தக்காரர். ஒரு சொல் இனி தமிழ்நாடு முழுவதும் என் மூலம் ஒலித்து கொண்டிருக்கும். இதை சொல்வதில் நான் பெருமையடைகிறேன், சந்தோஷப்படுகிறேன்.

ஏனென்றால் சின்ன வயதில் இருந்து நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட எங்க அப்பாவை தான் நிறைய முறை பார்த்து இருப்பேன். அப்பா என்றால் நான் ரொம்ப எமோஷனல் ஆகிறுவேன். கேப்டன் எங்கேயும் போகல. நம்முடன் தான் இன்னைக்கு இருக்காரு. அவர் இறந்தது முதல் இந்த நாள் வரை எந்த மீடியாவிலும் பேசவில்லை. இதுதான் முதல் முறையாக பேசுகிறேன். அதேபோல் எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப் போனது மனதுக்கு கஷ்டமா இருக்கு. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை. எனது அப்பா விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே எங்களை கொடுத்து கொடுத்து தான் பழக்கி இருக்கிறார். அது தான் என்னைக்கும் இருக்கு. நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல. என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம்.

ரொம்ப பெருமையா இதை சொல்வேன். காரணம், ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எல்லாரும் வீட்டில் உறுதிமொழி எடுப்பிங்க. 2023ல என் பிறந்த நாளை முன்னிட்டு, அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும் போதும் சரி நான் அப்பாவிடம் சில வாக்குறுதிகள் கொடுத்தேன்.அதை 2024ல் நிறைவேற்றுவேன். அது என்ன என்பதை இப்ப சொல்ல முடியாது. காலம் அதுக்கான பதிலை சொல்லும். கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை. நான் ஒவ்வொரு மீட்டிங்கில்  சொன்னேன். குகைக்கில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்னாருன்னா அது அவரின் மன தைரியம் மட்டும் தான்.

விஜயகாந்துக்கு நினைவு இல்லை என நிறைய யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடியும் வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் சொல்ல போய் தான் தெரியும். உடனே நான் சிசிடிவி பாக்குறப்ப அப்பா அந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணி தாளம் போட்டு கொண்டு இருந்தார்.

டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், " இந்த விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்" என்பதை கூறி விடை பெறுகிறேன். அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவுக்கு வர முடியாமல் போனவர்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுக்கு யார் மேலும் எந்த வருத்தமும் இல்லை. கோபமும் இல்லை என தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
தமிழில் முதல்முறையாக நான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்..நடிகை மாளவிகா தகவல்
தமிழில் முதல்முறையாக நான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்..நடிகை மாளவிகா தகவல்
முதல் முறையாக கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறேன்..நடிகை கெளரி கிஷன் தகவல்
முதல் முறையாக கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறேன்..நடிகை கெளரி கிஷன் தகவல்
விக்னேஷ் சிவனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை..எல்.ஐ.கே பட விழாவில் இயக்குநர் ராம்
விக்னேஷ் சிவனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை..எல்.ஐ.கே பட விழாவில் இயக்குநர் ராம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget