மேலும் அறிய

Siragadikka Aasai serial July 29 : ரவி தலையில் இடியை போட்ட ஸ்ருதி... விஜயா மீதே சந்தேகப்படும் மனோஜ்... சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today :வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம் என ஸ்ருதி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான் ரவி. இன்று சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது.

Siragadikka Aasai Serial July 29 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயாவையும், மீனாவையும் கோயிலுக்கு அழைத்து சென்ற மீனாவும் முத்துவும் வீட்டுக்கு வருகிறார்கள். போன விஷயம் எல்லாம் நடந்துதா? என பாட்டி கேட்க எல்லாம் சிறப்பாக நடந்துச்சு பாட்டி என கிண்டலாக சொல்கிறான் முத்து.

அண்ணாமலை "விஜயா போய் தண்ணி கொண்டுவா" என சொல்ல விஜயாவின் முகமே மலர்ந்து போகிறது. அனைவருக்கும் அதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. 

Siragadikka Aasai serial July 29 : ரவி தலையில் இடியை போட்ட ஸ்ருதி... விஜயா மீதே சந்தேகப்படும் மனோஜ்... சிறகடிக்க ஆசையில் இன்று

அண்ணாமலை தண்ணீர் குடித்து கொண்டு இருக்க அவர் கழுத்தில் இருக்கும் சிகப்பு மச்சம் பற்றி கேட்க அது மச்சம் இல்ல அம்மாவோட பொட்டு என சொல்லி அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். 

"பாட்டி : கணவன் மனைவிக்குள் சண்டை வந்தா இப்படி ஒருவருக்கொருவர் பேசாமல் எல்லாம் இருக்க கூடாது. உடனே பேசி சந்தனம் ஆகிவிட வேண்டும். உங்களை பார்த்து தான் உங்களின் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்" என சொல்கிறார்.

பாட்டி ஊருக்கு கிளம்புகிறேன் என சொல்ல முத்து கொண்டு போய் அவரை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து செல்கிறான். 

ரவி ஸ்ருதியை கட்டிபிடிக்க ஸ்ருதி அவனை தள்ளிவிடுகிறாள். என்கிட்டவே நெருங்காத என ஒதுங்குகிறாள். 

ஸ்ருதி : நான் குழந்தை பெத்துக்க மாட்டேன். இப்போ மட்டும் இல்ல எப்பவுமே பெத்துக்க மாட்டேன். இப்போ தான் அதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் வந்துடுச்சு இல்ல. ஒரு வாடகை தாய் மூலமா பெத்துக்கலாம். அதுவும் நம்ம குழந்தை தானே.

ரவி : என்ன ஸ்ருதி சொல்ற? அந்த பீல் எல்லாம் அனுபவிக்கனும் என உனக்கு ஆசையே இல்லையா? எங்க அம்மா அப்பா இதுக்கு ஒதுக்க மாட்டாங்க. ஏன் உங்கள் வீட்ல கூட இதுக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டாங்க.

ஸ்ருதி : அவங்க எதுக்கு ஒத்துக்கணும். இதுல நான் தான் முடிவு எடுக்கணும்.

ரவி : சரி இப்போ இதை பத்தி பேச வேணாம். நமக்கு முன்னாடி இரண்டு பேர் இருக்காங்க இல்ல. அப்புறமா நாம இதை பத்தி பேசிக்கலாம். 

ஸ்ருதி : எப்போ இருந்தாலும் இது தான் என்னோட முடிவு" என்கிறாள் ஸ்ருதி. ரவி ஸ்ருதி பேசியதை நினைத்து அதிர்ச்சி அடைகிறான்.  

மனோஜ் அவனுக்கு வந்த மொட்டை கடுதாசி பற்றி நினைத்து தூங்காமல் அதை பற்றியே யோசித்து கொண்டு இருக்கிறான். விஜயாவுக்கு போன் பண்ணி ஹாலுக்கு வர சொல்கிறான். விஜயா சலித்து கொண்டே வெளியில் வருகிறாள்.

மனோஜ் அந்த லெட்டர் பற்றி சொல்ல "மாசாமாசம் 50 ஆயிரம் கொடுக்க சொன்னாங்கன்னு புதுசா பிளான் போடுறியா? என கேட்கிறாள். 

 

Siragadikka Aasai serial July 29 : ரவி தலையில் இடியை போட்ட ஸ்ருதி... விஜயா மீதே சந்தேகப்படும் மனோஜ்... சிறகடிக்க ஆசையில் இன்று


"மனோஜ் : எனக்கு யார் இதை பண்ணி இருப்பா என தெரிஞ்சுடுச்சு. உங்களை நகை விஷயத்துல மாட்டிவிட்டதால பார்வதி ஆண்டியோட சேர்ந்து இப்படி பண்ணி இருக்கீங்க தானே. இனி நான் யாரையும் நம்ப போறது இல்ல.

விஜயா : அட பாவி... உனக்கு போய் சப்போர்ட் பண்ணி நான் இந்த வீட்ல அசிங்கபட்டா நீ என்னையே சந்தேகப்படுறியா" என மனோஜை அடிக்கிறாள் விஜயா. 

முத்து வாங்கிய புதிய காரை ஓட்டுவதற்காக முத்துவின் நண்பன் ஒருவன் வீட்டுக்கு வருகிறான். அண்ணாமலை கார் சாவியை அந்த பையனிடம் ஆசீர்வாதம் பண்ணி கொடுக்கிறார். 

வழக்கம் போல விஜயா நக்கலாக பேசுகிறாள். அந்த நேரம் ரூமில் இருந்து வெளியே வந்த மனோஜும் ரோகிணியும் என்ன நடக்கிறது என புரியாமல் பார்கிறார்கள். 

அந்த புது டிரைவரிடம் "காரை பார்த்து பத்திரமாக ஓட்ட வேண்டும். கெட்ட பழக்கம் எல்லாம் வைச்சுக்கிட்டு வண்டி ஓட்ட கூடாது. ப்ரெண்ட் வேற வேலை வேற. அதனால பார்த்து பொறுப்பாக ஓட்டணும்" என மீனா கண்டிஷன் போடுகிறாள். 

அண்ணாமலையும் மீனா சொல்வது சரி தான் என்கிறார். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
"ஈரான் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துங்க" ஐடியா கொடுத்த டிரம்ப்.. பேரழிவை நோக்கி இஸ்ரேல்?
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
Embed widget