Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிவனாண்டியின் சதியை மயில்வாகனம் வீடியோவாக எடுத்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சந்திரகலா முத்துவேல் சிவனாண்டி ஆகியோரை பிடிக்க திட்டம் ஒன்றை தீட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வீடியோவில் சிக்கிய சிவனாண்டி:
அதாவது, முத்துவேல் மற்றும் சிவனாண்டி ஆகியோர் தேர்தலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக திருடிய நகையில் ஒரு 25 சவரன் நகையை விற்று விடலாம் என முடிவெடுக்கின்றனர். சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஒரு தோப்பில் சந்திக்கின்றனர்.
அங்கு நகையை கைமாற்றிக் கொள்ள அப்போது அதை மறைந்திருந்து வீடியோ எடுக்கிறான் மயில் வாகனம். பிறகு சீட்டு கிடைப்பதற்காக பூர்வீக நகை அவசரத் தேவை என்பதால் விற்பதாக சொல்லி பணத்தை வாங்க இதையும் வீடியோ எடுக்கின்றனர்.
கார்த்திக் திட்டத்தை கண்டுபிடித்த முத்துவேல்:
பணத்தை வாங்கிக் கொண்டு இவர்கள் அனைவரும் கிளம்ப, முத்துவேல் போனை மறந்து வைத்துவிட்டு செல்கிறான். கார்த்திக் சேட்டுவிடம் பணத்தை கொடுத்து அதன் நகைகளை வாங்க முத்துவேல் தனது போனை எடுக்க மீண்டும் அங்கு வர இது கார்த்திக் தீட்டிய திட்டம் என்ற உண்மை என தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























