Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துவேல் கார்த்தியின் திட்டத்தை அறிந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
முத்துவேலை கடத்திய கார்த்திக்:
அதாவது முத்துவேல் அடகு கடையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய இதை பார்த்த கார்த்திக், மயில்வாகனம் அவனை மடக்கி பிடித்து ஒரு அறைக்குள் அடைத்து வைக்கின்றனர். இவன் மட்டும் வெளியே போனால் நம்முடைய திட்டம் அனைத்தும் வேஸ்ட்டா போயிடும் என சொல்கிறான்.
பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு போலீஸ் வருகை தருகின்றனர். இந்த வீட்ல இருக்காங்க கை ரேகை நகை திருட்டு கேஸில் ஒத்து போவதாக சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மாட்டிக்கொண்ட சந்திரகலா:
வீட்ல இருக்க எல்லாருடைய கைரேகையும் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி அனைவரது கைரேகையும் எடுக்க சந்திரகலாவின் கைரேகை ஒத்துப்போக அதிர்ச்சி அடைகிறாள். பிறகு கார்த்திக் தன்னிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தை கொடுக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















