Karthigai Deepam: ஜாமினில் வந்த சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியை பழிவாங்க தீ்க்குளிப்பு நாடகம்!
Karthigai Deepam: சந்திரகலா ஜாமினில் வெளியே வந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திர கலாவை கைது செய்ய இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பழி வாங்க சந்திரகலா சபதம்:
அதாவது, சாமுண்டீஸ்வரி சந்திரகலா செய்த துரோகத்தை நினைத்து சாப்பிடாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மகள்கள் மூவரும் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை சமாதானம் செய்து சாப்பிட வைக்கின்றனர்.
மறுபக்கம் ஜெயிலில் இருக்கும் சந்திரகலாவை சிவனாண்டி ஜாமினில் வெளிய எடுக்கிறான். இனிமே நீ அவங்களோட இருக்க வேண்டாம் என்கூடவே வந்துவிடு என்று சொல்லி கூப்பிட, இல்ல இனிமேதான் நான் அவ கூட இருக்கணும். அப்பதான் அவளை பழி வாங்க முடியும் என சொல்கிறாள்.
தீக்குளிக்க முயற்சித்த சந்திரகலா:
பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வர அவளை பார்த்ததும் சாமுண்டீஸ்வரி உட்பட அனைவரும் கோபமடைகின்றனர். எனக்கு உன்ன விட்டா வேற யாரு அக்கா இருக்கா? எனது சந்திரகலா நாடகமாட சாமுண்டீஸ்வரி மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறாள்.
நீ ஏன் இப்படி சொன்னதுக்கு அப்புறம் நான் எதுக்கு உயிரோட இருக்கணும் என சந்திரகலா நான் இங்கேயே கொளுத்திக்கிட்டு செத்துப் போறேன் என நாடகமாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























