மேலும் அறிய

Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal serial: போலீசிடம் இருந்து சித்தார்த்தை கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லும் ராமசாமி. குணசேகரன் தோல்வியை உறுதி செய்யும் ஜனனி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 20) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சக்தி, ஜனனிக்கு போன் செய்து ஷாக் ஒன்றை கொடுக்கிறான். "கிருஷ்ணசாமியும் ராமசாமியும் வந்து சித்தார்த்தை கூட்டிட்டு போயிட்டாங்க. எப்படியாது கல்யாணத்தை தடுத்து நிறுத்தியாகணும் ஜனனி " என சொல்ல ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.

Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!


தர்ஷினி - சித்தார்த் கல்யாண வேலைகள் மிகவும் மும்மரமாக மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. உமையாள் அம்மா, கணவர், நாச்சியப்பன் என அனைவருமே அங்கே விருப்பமில்லாமல் வந்து இருக்கிறார்கள். "வந்தோமா, சாப்பிட்டோமா, கிளம்பினோமான்னு இருந்தா நல்லது" என குடும்பத்தினரை மிரட்டுகிறாள் உமையாள். "இந்தக் கல்யாணத்தை நடத்துவது பெரிய சவால். அதுல நாங்க ஜெயிக்கணும்" என குணசேகரன் ஆணவமாக பேசுகிறார். நாச்சியப்பன் அனைத்தையும் கேட்டு கொண்டு அமைதியாக இருக்கிறார்.

"தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணனும் என அவர் போடுற திட்டம் அவங்களுக்கு தோல்வியை மட்டும் தான் தர போகுது. அது மிகப் பெரிய தோல்வி" என ஜனனி சொல்கிறாள். கொன்றவை, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி குழப்பமாக பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

 


நேற்றைய எபிசோடில் கரிகாலனை அழைத்துக் கொண்டு சித்தார்த் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக ராமசாமியும் கிருஷ்ணசாமியும் செல்கிறார்கள். வழியில் நந்தினியும் ரேணுகாவும் ஒரு கடையில்  பொருட்கள் வாங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விடுகிறார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்று சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள். 

இரவு போலீஸ் வந்து விசாரிக்கிறது. பையனை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு வந்து வைத்திருப்பதாக சொல்லி சித்தார்த்தை வீட்டுக்குள் சென்று அழைத்து வருகிறார்கள் போலீஸ். அவனும் ஆமாம் கடத்திக் கொண்டு தான் வந்தார்கள் என சொல்ல போலீஸ் கதிர், சக்தி மற்றும் ஞானம் மூவரையும் கைது செய்து அழைத்து செல்கிறார்கள்.

அடுத்த நாள் காலை ராமசாமியும் கிருஷ்ணசாமியும் போலீஸ் ஸ்டேஷன் வந்து சித்தார்த்தை அழைத்துச் செல்கிறார்கள். "உங்களால் ஒன்னும் செய்ய முடியாது" என கதிர் அவர்களை பார்த்து சவால் விட "உன்னால் இங்கேயே இருந்து என்ன முடியுமோ அதை பண்ணு" என நக்கலாக சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

 
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
ஈஸ்வரி கொன்றவையை சந்திக்கிறாள். "பையன் காணாமல் போய்விட்டான் எனும்போது எந்த தைரியத்தில் குணசேகரன் திருமண ஏற்பாடுகளை செய்கிறார் எனப் புரியவில்லை. இதற்கு பின்னால் பெரிய பிளான் ஏதாவது இருக்குமோ" என சந்தேகப்படுகிறார். "தர்ஷினியின் மனநிலை, வயசு இது அனைத்தையும் வைத்து சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும்" என சொல்கிறார்.

வீட்டுக்கு வந்த ஈஸ்வரி நந்தினிக்கு போன் செய்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என விசாரிக்க, நந்தினி நடந்த அனைத்து விஷயத்தை பற்றி சொல்கிறாள். "வீட்டில் தர்ஷினியும் இல்லை மற்றவர்களும் இல்லை. அவர் தர்ஷினியை எங்கேயோ கூட்டிட்டு போய் இருக்கார்" என சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறாள். இதுதான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.