மேலும் அறிய

சிவன் - பார்வதி சுவாரஸ்யம்.. விறுவிறுப்பான கதைக்களத்துடன் 'சிவசக்தி திருவிளையாடல்'

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் 'சிவசக்தி திருவிளையாடல்'

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு மிகவும் பிரமாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக புராண தொடர் 'சிவசக்தி திருவிளையாடல்'. சுவாரஸ்யமான திரைக்கதையோடு, மிகுந்த பொருட்செலவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 

பிரஜாபதி தட்சன் செய்த தவப்பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி. சிவன் மீது காதல் கொள்ளும் சதி, பிரஜாபதி தட்சன் தடைகளை தகர்த்தெறிந்து சிவனை கரம் பிடிக்கிறார். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம் மூலம் தாட்சாயிணி வாழ்விலும் சிவன் வாழ்விலும் ஆறாத துயரம் நிகழ்கிறது.

சதி தன் உடலை அக்னிக்கு இரையாக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிவன் வீரபத்ரராக உருவெடுத்து பிரஜாபதி தட்சனின் ஆணவத்தை அடக்கி அவர் தலையினைக் கொய்கிறார். கோபம் அடங்காத சிவன் இவ்வுலகினையே அழிக்கும் அளவுக்குச் செல்கிறார். அதனை நாராயணர் தடுக்கிறார். ஆனாலும் கோபம் அடங்காத சிவன் ஆழ்ந்த தவத்திற்குள் மூழ்குகிறார்.

இப்பூவுலகின் சுழற்சிக்கு சிவன் – சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்ந்த நாராயணர், பிரம்மன் மற்றும் தேவர்கள் சக்தியை வேண்ட, சக்தி பார்வதியாக உருவெடுக்கிறார். 

 

சிவன் - பார்வதி சுவாரஸ்யம்.. விறுவிறுப்பான கதைக்களத்துடன் 'சிவசக்தி திருவிளையாடல்


இமயமலை அரசன் ஹிம்மான் - மைனாதேவி தம்பதிக்கு மகளாக பிறக்கிறார். சிவனின் மீது இளம் வயது முதலே பக்திகொண்டு வளர்கிறாள்.திருமண வயதை அடையும் பார்வதி திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் சிவனின் தவம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது. நாராயணர் ஏற்பாட்டில் மன்மதனும் ரதியும் சிவனின் தவத்தினைக் கலைக்கிறார்கள். தவம் கலைந்ததில் கோபம் அடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து விடுகிறார். 

காதல் கணவனை இழந்த ரதி கோபத்தில் பார்வதியை நோக்கி ”உனக்காகத்தான்  சிவனின் தவத்தினைக் கலைத்தோம். அதனால் தான் இப்போது மன்மதனை இழந்து நிற்கிறேன். இந்த பாவம் உன்னைச் சும்மா விடாது. உனக்கும் சிவனுக்கு திருமணம் நடந்தாலும் உனக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது” என்று சபித்துவிடுகிறார்.

ஒரு புறம் சிவன் மீதான காதல், மறுபுறம் ரதியின் சாபம், பார்வதி கலங்கிப் போகிறார். சதியின் மறைவை மறக்க முடியாமல் தவிக்கும் சிவனை – பார்வதியோடு சேர்த்துவைக்க நாராயணரும் மற்ற தேவர்களும் படாத பாடு படுகிறார்கள்.

அதே நேரத்தில் அரக உலகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தால் அரக்கர்களுக்கு நல்லதல்ல, எனவே இதைத் தடுக்க வேண்டும் என்று தாரகாசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் பல சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறான்.

ஒரு கட்டத்தில் மனம் மாறும் சிவன் பார்வதி தான் ஆதிபராசக்தி என்பதை உணர வேண்டும் என்பதற்காக பல சோதனைகளைத் தருகிறார். அரக்கன் தாரகாசுரனின் சதிகளைத் தகர்த்து, கடும் தவம் செய்து பார்வதி சிவனின் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் பார்வதியின் தாய் மைனாதேவி சிவனுக்கு பார்வதியைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார். ”ரதியின் சாபத்தினால்  சிவனுக்கும் பார்வதிக்கு திருமணம் நடந்தால், பார்வதிக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது. அப்படியிருக்கும் போது ஒரு தாயாக பார்வதியை சிவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது” என்று தன் வாதத்தை முன்வைக்கிறார்.

நாராயணர் மற்றும் தேவர்களால் மைனாதேவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். வரும் வாரத்தில் சிவன் பார்வதியை என்ன திருவிளையாடல்கள் செய்து திருமணம் முடிக்கிறார் என்பது தான் கதைக்களம். 

சிவசக்தி திருவிளையாடல் தொடரின் திரைக்கதையில்  திடீர் திருப்பங்கள், பாரதத் தேசத்தின் ஆன்மிகப் புராணச் செய்திகளை சேர்த்து விறுவிறுப்பாகவம் ஸ்வாரஸ்யமாகவம் வழங்கி வருகிறது கலர்ஸ் தொலைக்காட்சி. 

சிவன் - பார்வதி  ஒன்று சேர்வர்களா? திருமணம் நடக்குமா?  அரக்கன் தாரகாசுரன் என்ன சதி செய்யப் போகிறான்? என இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும்  இந்த தொடரை காணாதவறாதீர்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Embed widget