மேலும் அறிய

சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் - டாணாக்காரனுக்கு சீமான் வாழ்த்து

இந்த ‘டாணாக்காரன்’ திரைப்படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பேரன்புமிக்கப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,  திரைப்படக்குழுவினருக்கு  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:

வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும் காவல்துறையில், புரையோடிப் போயிருக்கும் ஆதிக்கப் படிநிலைகளை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுகிறது, தம்பி தமிழ் இயக்கி நேற்று வெளிவந்திருக்கும் 'டாணாக்காரன்' திரைப்படம்.

1982ம் ஆண்டில் காவல் பணிக்குத் தேர்வானவர்கள், பின்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் நிராகரிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் வழக்கு, நீதிமன்றம், எனப் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிப் பிறகு, 1998ம் ஆண்டில் நியமனம் பெற்று காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வருவதில் தொடங்குகிறது ’டாணாக்காரன்’ திரைப்படம். அங்கிருந்து தொடங்கும் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையோட்டம் கடைசிக் காட்சிவரை நீண்டு படத்தோடு பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது.

தனித்துவம் மிக்க இக்கதைக் களத்தைத் தெரிவு செய்து, திறம்பட அதற்கான திரைக்கதையை வடிவமைத்திருப்பதே பெரும் பாராட்டிற்குரியது. திரைப்படங்கள் கண்டு திரைப்படங்கள் உருவாக்குவதைவிட, பெற்ற வாழ்வனுபவங்களிலிருந்து கதைக்களங்களையும், கதை மாந்தர்களையும் உருவாக்குவதே சிறந்த படைப்பாக முடியும் என்பதற்கும், உண்மைக்கு நெருக்கமாகவும் உணர்வுத் துடிப்போடும் அப்படிப்பட்ட படங்களே அமையும் என்பதற்கும், ’டாணாக்காரன்’ திரைப்படம் இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டாகி இருக்கிறது.

 

திரைக்கதை இறுதி செய்யப்பட்ட பிறகு, ஒரு திரைப்பட உருவாக்கத்தில் கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதும்; கதைக்களத்திற்குத் தகுந்த தொழில்நுட்பக் கலைஞர்களைப் பங்கேற்கச் செய்வதும்; படப்பிடிப்பிற்கு ஏற்ற இடங்களை முடிவு செய்வதுமான முன் தயாரிப்புப் பணிகள் மிக முக்கியமானவை. காட்சி ஊடகமான திரைப்படத்தின் ஒட்டுமொத்த வடிவத்தை, இந்த முன்தயாரிப்புப் பணிகளில் செலுத்தப்படும் உழைப்பும் அர்ப்பணிப்புமே பாதியளவு தீர்மானித்துவிடும். அவ்வகையில் ’டாணாக்காரன்’ திரைப்படத்தின் செம்மையான திரைக்கதையை எழுத்து வடிவத்திலிருந்து காட்சி வடிவமாக்க, இயக்குநர் தமிழ் அவர்கள் தேர்ந்தெடுத்த படப்பிடிப்புக் களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், என எல்லாமே, எல்லோருமே பொருந்தி வந்து பங்களித்திருப்பது தனிச்சிறப்பு.

’அறிவு’ கதாப்பாத்திரத்தின் முப்பரிமாணங்களையும் உணர்ந்து, காட்சிகளின் எல்லாவிதமான உணர்வு நிலைகளிலும் முழுமையாகத் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, திரை வாழ்க்கையில் புதிய உயரத்தை எட்டியிருக்கிறார் என்னன்புத் தம்பி விக்ரம் பிரபு. நடிப்பின் இலக்கணம் தந்த அன்னை இல்லத்திற்குத் தன் நடிப்பால் பெருமை சேர்த்திருக்கிறார் விக்ரம்.

’திரைப்படம் - ஒரு நிகழ்கலை’ என்பது புரிந்து, அஞ்சலி, லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட்,பிரகதீஸ்வரன், லிவிங்ஸ்டன், மதுசூதன், உதயபானு மகேஸ்வரன், பாவெல் நவகீதன், லிங்கேஷ் என ’டாணாக்காரன்’ நடிகர்கள் அனைவருமே தங்களின் கதாப்பாத்திரங்களைத் திறம்படக் கண்முன் நிகழ்த்தி முத்திரை பதிக்கிறார்கள்.

கதை மாந்தர்களுக்கு இடையேயான முரண்களைத் தெளிவாகக் கணித்து, அதற்கேற்றபடிக் காட்சிகளை அடுக்கித் திரைக்கதையின் உள்கட்டமைப்பை கூறுபோட்டிருக்கிறார், படத்தின் திரைக்கதையாளரான அன்புத்தம்பி தமிழ். அதுபோலவே, பெரும்பாலான காட்சிகள் ஒரே நிகழ்விடத்தில் இடம்பெறுவதை உள்வாங்கி, கொஞ்சம் பிசகினாலும் பார்வையாளர்களுக்கு அயற்சி ஏற்பட வாய்ப்பிருக்கும் சிக்கலை உணர்ந்து, நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது, அவர் திரைக்கதையின் வெளிக்கட்டமைப்பு. தமிழ் கொண்டு வந்த இந்த உள்,வெளிக் கட்டமைப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டுத் நுட்பமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ்.

கதைக்களத்தின் நிலவியலை உள்வாங்கி, பெரும்பான்மைக் காட்சிகளை இயற்கையாகக் கிடைத்த ஒளியில் பதிவு செய்து, காட்சிகளின் ஊடாகப் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்து சிறப்பித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.

இரசிக்க வைக்கும் பாடல்களிலும், பார்வையாளர்களைக் காட்சிகளோடு ஒன்றச் செய்து உணர்வூட்டும் பின்னணி இசையிலும் திரைக்கதைக்குப் பலம் சேர்த்து மெருகூட்டியிருக்கிறார், இசையமைப்பாளர் ஜிப்ரான்.

சரியான கதையைத் தேர்ந்தெடுத்து, இயக்குநரின் படைப்பாக்கத்திற்கு உற்ற துணையாய் இருந்து நிறைவு செய்திருக்கிறார்கள், தயாரிப்பாளர்களான, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்கபிரபாகரன், ஆகியோர்.

”இந்த அமைப்பு என்பது ஒரு முரட்டு வெள்ளைக்காரனுக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தை. இங்கே நேர்மையாக நிற்க நினைப்பவர்கள்தான் சிரமங்களுக்குள்ளாக வேண்டும். இதை நாம்தான் மாற்ற வேண்டும். மக்களை நேசிக்கும் நீ அமைப்பிற்கு வெளியே போய் என்ன செய்வாய்? அதிகாரம் இல்லாத உணர்ச்சி உன்னை எரித்தே கொல்லும். அதிகாரம் வலிமையானது எனச் சட்டமேதை அம்பேத்கர் சொன்னது, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றதான். அதிகாரத்தைக் கைப்பற்றி அமைப்பை சரிசெய்துகொள்ளுங்கள். அமைப்பைச் சரிசெய்யவே நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு!” எனப் படத்தின் இறுதிக் காட்சியில் சட்ட ஆசிரியர், அறிவுக்குப் சொல்லும் உரையாடல், அரசியல் அதிகாரத்தின் தேவையையும் அதை எளியவர்கள் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது. இப்படித் திரைப்படம் முழுவதுமே உள்ளம் தொடும் அருமையான உரையாடல்களாலும் கவனம் ஈர்க்கிறார், அன்புத் தம்பி தமிழ்.

திரைப்படத்தின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், என அனைத்திலும் தனிமுத்திரை பதித்து, தமிழ்த் திரைப்படத் துறையில் தவிர்க்க முடியாப் புதிய தடம் பதித்திருக்கும் என்னன்பு இளவல் தமிழ் அவர்களை நெஞ்சாரத் தழுவிக்கொள்கிறேன்.

இந்த ‘டாணாக்காரன்’ திரைப்படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பேரன்புமிக்கப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Neelira Movie Review : ஈழப்போருக்கு நடுவில் திருமணத்தை நடத்த போராடும் தமிழ் குடும்பம்...நீளிரா திரைப்பட விமர்சனம் இதோ
Neelira Movie Review : ஈழப்போருக்கு நடுவில் திருமணத்தை நடத்த போராடும் தமிழ் குடும்பம்...நீளிரா திரைப்பட விமர்சனம் இதோ
யூத் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கருப்பையா கென்னிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
யூத் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கருப்பையா கென்னிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
TVK ELECTION CAMPAIGN SONG : மெரள போகுது ஸ்டேட்டு...தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் இதோ
TVK ELECTION CAMPAIGN SONG : மெரள போகுது ஸ்டேட்டு...தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் இதோ
Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget