மேலும் அறிய

நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு

திருநேல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் சாமானிய மக்கள் மீது அடையாளம் தெரியாத 9 நபர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து  திரைப்பட இயக்குநர் மார் செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு அவர் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் . கடந்த ஆண்டு பள்ளி மாணவர் சின்னதுரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதேபோல் தலித சமூகத்தைச் சேர்ந்த கவின் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்பவரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியளவில் பேசுபொருளானது.  தற்போது  நெல்லை மாவட்டம்  நாங்குநேரியில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்த கிராமமும் தலித் குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு சார்பாக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் கண்டனம் 

தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் "நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

நாங்குநேரியில் இருவர் கொலை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் நேற்று இரவு 9 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். இந்த கும்பல்  அந்த வழியில் பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அவர்களை அரிவாளால் வெட்டி அவர்களின் வாகனத்தை பறித்து சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த கும்பல் பெரும்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு டீக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்கள். அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை விரட்டியபடி வெட்டினார்கள். இதில் ஒரு வட மாநில புலம்பெயர் தொழிலாளர் ஒருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

6 பேர் கைது 

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. 8 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக அரசு மீது பல்வேறு அரசியல் அட்சிக் கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Embed widget