மேலும் அறிய

நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு

திருநேல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் சாமானிய மக்கள் மீது அடையாளம் தெரியாத 9 நபர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து  திரைப்பட இயக்குநர் மார் செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு அவர் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் . கடந்த ஆண்டு பள்ளி மாணவர் சின்னதுரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதேபோல் தலித சமூகத்தைச் சேர்ந்த கவின் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்பவரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியளவில் பேசுபொருளானது.  தற்போது  நெல்லை மாவட்டம்  நாங்குநேரியில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்த கிராமமும் தலித் குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு சார்பாக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் கண்டனம் 

தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் "நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

நாங்குநேரியில் இருவர் கொலை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் நேற்று இரவு 9 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். இந்த கும்பல்  அந்த வழியில் பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அவர்களை அரிவாளால் வெட்டி அவர்களின் வாகனத்தை பறித்து சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த கும்பல் பெரும்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு டீக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்கள். அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை விரட்டியபடி வெட்டினார்கள். இதில் ஒரு வட மாநில புலம்பெயர் தொழிலாளர் ஒருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

6 பேர் கைது 

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. 8 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக அரசு மீது பல்வேறு அரசியல் அட்சிக் கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
Embed widget