மேலும் அறிய

Nayanthara: வாடகைத்தாய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..6 ஆண்டுகளுக்கு முன்பே விக்னேஷ் சிவன் - நயனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்ததா?

நானும் ரௌடி தான் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது.

வாடகைத்தாய் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. கிட்டதட்ட 7 ஆண்டுகளாக காதலித்து கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமணம்  கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் ஹனி மூன் சென்று பகிர்ந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் திரையுலக பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதனிடையே திருமணம்  நடந்து சரியாக 4 மாதங்கள் கழித்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளம் மூலமாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இது ஒருபுறம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தாலும், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும் மறுபுறம் அது எப்படி சாத்தியம் என்ற பேச்சுக்களே இணையம் முழுவதும் பரவிக்கிடந்தது. ஆனால் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியான நிலையில் அதுவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்ட முறைகளை பயன்படுத்தி தான் வாடகைத்தாய் ஏற்பாடு செய்தார்களா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழ, இதுதொடர்பாக விசாரணை நடத்த சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தரப்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துக்கொண்டதற்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் வாடகைத்தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.