காத்திருக்க வைத்த சிம்பு...பிரதீப் ரங்கநாதன் வைத்து டிராகன் 2 எடுக்க கிளம்பிய அஸ்வத் மாரிமுத்து
டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவை தொடர்ந்து டிராகன் 2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்கள் பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து

கடந்த ஆண்டு வெளியான டிராகன் திரைப்படம் வசூலை வாரி குவித்தது. வரண்டு போன தமிழ் சினிமா சூழலில் ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் அமைந்தது. மீண்டும் இந்த இயக்குநர் நடிகர் காம்போ இணையுமா என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் அஸ்வத் மாரிமுத்து அடுத்த படத்திற்கு சிம்புவுடன் கமிட் ஆகி இருந்தார். முன்னதாக காட் ஆஃப் லவ் என்று படத்தின் டம்மி டைட்டில் வெளியாகியிருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
காத்திருக்க வைத்த சிம்பு
ஃபேண்டஸி கதையாக உருவாக இருந்த இப்படம் சிம்புவை மறுபடியும் பழைய ஃபார்மில் காட்டும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் டிராகன் படம் வெளியாகி ஓராண்டு ஆண்டு முடிந்துள்ள நிலையில் சிம்புவின் படன் டேக் ஆஃப் ஆகவில்லை. சிம்புவை வைத்து அறிவிப்பு வெளியாகி நிலுவையில் நிற்கும் படங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இப்படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையில் அஸ்வத் மாரிமுத்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
டிராகன் 2 அப்டேட்
இன்றோடு டிராகன் திரைப்படம் வெளியாகி ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன தனது சமூக வலைதள பக்கத்தில் டிராகன் 2 பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளார் " நண்பரிலிருந்து இயக்குநர் என்பதை உணரவே எனக்கு கொஞ்ச காலம் ஆனது. ஆனால் இப்போது இரண்டிலும் சிறந்த மனிதன் என்னுடன் இருக்கிறான்." என்று அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் இரண்டு டிராகன்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். சிம்பு படம் தாமதமாவதால் பிரதீப் ரங்கநாதனை வைத்து அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்திற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது .
Friend to Director transition took some time for me .
— Pradeep Ranganathan (@pradeeponelife) February 21, 2026
But now i have the best in both with me ❤️
Coming soon : https://t.co/hCAQ5NymYD pic.twitter.com/IQ36aNzhoC























