மேலும் அறிய

Entertainment Headlines: கீர்த்தி பாண்டியன் குறித்து அசோக் செல்வன்! வடிவேலு பற்றி பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு - சினிமா ரவுண்ட்அப்

இன்றைய பொழுதுபோக்கு முக்கிய தலைப்புச் செய்திகளை கீழே பார்க்கலாம்.

Mansoor Ali Khan: மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! த்ரிஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திலும் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்ததுடன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அபராத தொகையை இரண்டு வாரங்களில் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

Ashok Selvan: "கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது" அட்டகாசமான பதில் தந்த அசோக் செல்வன்!

அசோக் செல்வனின் நடிப்பில் நேற்று சபாநாயகன் திரைப்படம் திரைக்கு வந்த நிலையில்,  படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என கீர்த்தி பாண்டியன் பேசியிருந்தது குறித்து அசோக் செல்வனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை. கீர்த்தி  தொடர்ந்து நடிப்பதில் எனக்கும் பிரச்சினை இல்லை என கூறி இருந்தார்.மேலும் படிக்க

Bayilvan Ranganathan: 'பெண்ணிடம் தவறாக நடந்த வடிவேலு.. அதற்கு நானே சாட்சி’ - பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு

வடிவேலு மீது பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர்,வடிவேலு பல அறைகளில் உல்லாசமாக இருந்தார். அதற்கு நானே சாட்சி. பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது நள்ளிரவில் ஒரு அறையில் பெண் ஒருவர் ஓ..வென கதறினார். நானும் புரொடக்‌ஷன் மேனேஜரும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் ஏதோ அப்பெண்ணை பண்ணிவிட்டார்.  அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பார் என என நினைக்கிறேன்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் படிக்க

Salaar: பிரபாஸூக்கு 100 கோடியா.. பிருத்விராஜூக்கு அதுல 10 சதவீதம்கூட இல்ல.. ‘சலார்’ படக்குழுவின் சம்பள விவரம்!

சுமார் 400 கோடிகள் பட்ஜெட்டில் சலார் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், பிரமாண்ட மாஸ் நாயகனாக உருவெடுத்துள்ள பிரபாஸ் இந்தப் படத்துக்காக் ரூ.100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் படத்தின் லாபத்தில் 10 சதவீதத்தையும் அவர் சம்பளமாகப் பெறுவார் எனக் கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர். 

படத்தில் பிரபாஸின் நண்பராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ரூ.4 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்துக்காக ரூ.8 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளாராம். மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு ரூ.4 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளாராம். கேஜிஎஃப் மூலம் கன்னட சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு ரூ.50 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.மேலும் படிக்க

Vetrimaaran: ‘என் படங்களில் டப்பிங் பிரச்னை இருக்கும்.. அயோத்தி இன்றைய சூழலில் பேசவேண்டிய கதை..’ - வெற்றிமாறன்

சென்னை சர்வதேவ திரைப்பட விழா நேற்று நிறைவுபெற்றது. டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பல உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் கலந்துகொண்டு விருது  வென்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:

அயோத்தி திரைப்படம் பற்றி இங்கு சொல்ல வேண்டும். படங்களின் நோக்கமும் ரொம்ப முக்கியம். இன்னைக்கு அயோத்தி மாதிரியான கதை பேசப்பட வேண்டிய நோக்கம் இன்றைக்கு உள்ளது. அதற்கு நன்றி. நான் இரண்டு, மூன்று இடங்களில் அயோத்தி படத்தைப் பற்றி பேச மறந்துவிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் வந்த சிறப்பான படங்களில் அயோத்தியும் ஒன்று” எனப் பேசியுள்ளார்.மேலும் படிக்க

 

தலைப்பு செய்திகள்

Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Embed widget