மேலும் அறிய

Dulquer : ’எல்லா ஸ்கிரீன்ஷாட்டும் என் போன்ல இருக்கு.. ஐடிகூட நினைவில் இருக்கு’ - வெடித்துப்பேசிய துல்கர்!

தன்மீதான தனிமனித தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

வாரிசு நடிகர் என்றாலே விடலைப் பருவம் எட்டியவுடனேயே சினிமாவில் தலைகாட்டுவது தான் இந்தியப் பாரம்பரியமாக இருக்கிறது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் தனது 26வது வயதில் தான் திரையில் பிரவேசித்தார். 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படம் மூலம் தான் அவர் அறிமுகமானார். இப்போது மலையாள திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார். இந்தி, தமிழ், தெலுங்கு,இந்தி என பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் துல்கர்.  இவர் தற்போது இந்தியில் நடித்துள்ள சுப் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை பால்கி இயக்கியுள்ளார்.அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள துல்கர் சோஷியல் மீடியா உலகம் குறித்து பேசினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

இந்நிலையில் தன்மீதான தனிமனித தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபாத் கபாருடனான நேர்காணலில் பேசிய துல்கர், '' என்னைப்பற்றி பேச வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய போனை எடுத்துப்பார்த்தால்  நான் நிறைய ஸ்கிரீன் ஷாட் வைத்துள்ளேன். எல்லாம் என்னை தனிமனித தாக்குதல் செய்த சோஷியல் மீடியா போஸ்டுகள்.அதனை எல்லாம் நான் சேமித்து வைத்துள்ளேன். ட்விட்டர், இன்ஸ்டா, யூடியூப் என அனைத்தையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். சில ஐடிக்களையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்றார். 

சோஷியல் மீடியா உலகம் உருவான பிறகு மற்றவர்கள் மீதான கிண்டல்கள் எல்லைமீறியே சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக செலிபிரிட்டிகள் பலரையும் சிலர் வக்கிரமாக தாக்குவதும், பாடி ஷேமிங் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் தொடங்கிய இதுமாதிரியான கீழ்த்தரமான கிண்டல்கள் பின்னர் வேண்டுமென்றே தனிமனித தாக்குதலாக நிகழ்த்தப்படுகின்றன. இந்த நிலையில் தன்மீதான தாக்குதல் குறித்து துல்கர் பேசியுள்ளது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

மம்முட்டியுடன் துல்கர் ?

தமிழ் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இவர் மலையாள சினிமாவின் மெஹா ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவரது மகன்தான் துல்கர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க வேண்டும் என்பது மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையும் கூட. இது குறித்து துல்கரிடம் கேட்டபொழுது “ எனக்கு அதுதான் ஆசை .அவருடன் ஒரு படம் எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்; அது எந்த மொழியில் இருந்தாலும் சரி. . நான் ஏற்கனவே அவரிடம் கேட்டிருக்கிறேன், அவருடைய முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார். பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே திரையில் காண்பது அரிதான செயல்தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே  வேண்டாம் . எனினும் துல்கரின் ஆசையை மம்முட்டி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் துல்கர் சல்மான் அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget