மேலும் அறிய

Dulquer : ’எல்லா ஸ்கிரீன்ஷாட்டும் என் போன்ல இருக்கு.. ஐடிகூட நினைவில் இருக்கு’ - வெடித்துப்பேசிய துல்கர்!

தன்மீதான தனிமனித தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

வாரிசு நடிகர் என்றாலே விடலைப் பருவம் எட்டியவுடனேயே சினிமாவில் தலைகாட்டுவது தான் இந்தியப் பாரம்பரியமாக இருக்கிறது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் தனது 26வது வயதில் தான் திரையில் பிரவேசித்தார். 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படம் மூலம் தான் அவர் அறிமுகமானார். இப்போது மலையாள திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார். இந்தி, தமிழ், தெலுங்கு,இந்தி என பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் துல்கர்.  இவர் தற்போது இந்தியில் நடித்துள்ள சுப் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை பால்கி இயக்கியுள்ளார்.அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள துல்கர் சோஷியல் மீடியா உலகம் குறித்து பேசினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

இந்நிலையில் தன்மீதான தனிமனித தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபாத் கபாருடனான நேர்காணலில் பேசிய துல்கர், '' என்னைப்பற்றி பேச வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய போனை எடுத்துப்பார்த்தால்  நான் நிறைய ஸ்கிரீன் ஷாட் வைத்துள்ளேன். எல்லாம் என்னை தனிமனித தாக்குதல் செய்த சோஷியல் மீடியா போஸ்டுகள்.அதனை எல்லாம் நான் சேமித்து வைத்துள்ளேன். ட்விட்டர், இன்ஸ்டா, யூடியூப் என அனைத்தையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். சில ஐடிக்களையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்றார். 

சோஷியல் மீடியா உலகம் உருவான பிறகு மற்றவர்கள் மீதான கிண்டல்கள் எல்லைமீறியே சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக செலிபிரிட்டிகள் பலரையும் சிலர் வக்கிரமாக தாக்குவதும், பாடி ஷேமிங் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் தொடங்கிய இதுமாதிரியான கீழ்த்தரமான கிண்டல்கள் பின்னர் வேண்டுமென்றே தனிமனித தாக்குதலாக நிகழ்த்தப்படுகின்றன. இந்த நிலையில் தன்மீதான தாக்குதல் குறித்து துல்கர் பேசியுள்ளது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

மம்முட்டியுடன் துல்கர் ?

தமிழ் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இவர் மலையாள சினிமாவின் மெஹா ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவரது மகன்தான் துல்கர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க வேண்டும் என்பது மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையும் கூட. இது குறித்து துல்கரிடம் கேட்டபொழுது “ எனக்கு அதுதான் ஆசை .அவருடன் ஒரு படம் எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்; அது எந்த மொழியில் இருந்தாலும் சரி. . நான் ஏற்கனவே அவரிடம் கேட்டிருக்கிறேன், அவருடைய முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார். பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே திரையில் காண்பது அரிதான செயல்தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே  வேண்டாம் . எனினும் துல்கரின் ஆசையை மம்முட்டி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் துல்கர் சல்மான் அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget