Parijatham: மாத்திரையை கொடுத்து மடக்கு.. ஸ்ரீஜாவுக்கு ஐடியா கொடுத்த சிந்தாமணி - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் விஷால், இசை மற்றும் ராகவன், ஸ்ரீஜா ஆகியோர் ஜோடியாக ஏற்காட்டுக்கு கிளம்ப தயாராக, இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஸ்ரீஜா இசையிடம் விஷால் அந்த போட்டியில் கலந்துக்க முடியாது என சவால் விடுகிறாள். அதைத்தொடர்ந்து ஒரு பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது.
மாத்திரை:
சாமியார் சொன்னபடி இசை தனது கையால் சமைத்திருக்க விஷாலிடம் அம்மா சமைத்தது என பொய் சொல்ல வைத்து அவனை கீழே அழைத்து வர வைக்கிறாள். பிறகு விஷால் சாப்பிட்டு முடிக்க அது இசை சமைத்தது என தெரிந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.
பிறகு இரண்டு ஜோடியும் ஏற்காட்டுக்கு கிளம்ப சிந்தாமணி ஸ்ரீஜாவிடம் ஒரு போதை மாத்திரையை கொடுத்து இதை ஜூஸ்ல கலந்து ராகவனுக்கு கொடுத்திடு.. அதன் பிறகு உங்களுக்குள்ள நடக்க வேண்டியது எல்லாம் நடந்து முடிந்ததும் என ஐடியா கொடுத்து அனுப்புகிறாள்.
வன்மத்துடன் ஸ்ரீஜா:
ஸ்ரீஜாவும் இசையை பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்துடன் ஏற்காட்டுக்கு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























