Karthigai Deepam Serial: கருவை கலைக்கச் சென்ற ரோகிணி.. உயிரைக் காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி கருவை கலைக்க முடிவு எடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குழந்தையிடம் மன்னிப்பு கேட்ட ரோகிணி:
அதாவது ரோகிணி ஒரு குழந்தையின் போட்டோவை வைத்துக்கொண்டு உன்னால இந்த குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. நீ பொறந்தா என் அம்மா உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க, அதற்கு ஏற்றார் போல அவங்களுக்கும் ஒரு ஆக்சிடென்ட் நடந்திருக்கு அதனால உன்ன வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் என்னை மன்னித்து விடு என வருத்தப்படுகிறாள்.
பிறகு கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி செல்கிறாள். தொடர்ந்து கார்த்திக் சாமுண்டீஸ்வரியை சந்தித்து ஜோசியக்காரர் சொன்னது பொய்யான தகவல். சிவனாண்டி தான் இப்படி சொல்ல வச்சிருக்கான், இத நான் நிரூபிக்கிறேன் என்கூட வாங்க என்று சொல்லி சாமுண்டீஸ்வரியை அழைத்துச் செல்கிறான்.
உண்மையை அறிந்த சாமுண்டீஸ்வரி:
ஒரு ஜோசியக்கார பெண்மணியிடம் அழைத்துச் சென்று ஜாதகத்தை கொடுக்க அவர் இந்த குழந்தை பிறந்தால் இங்கே 100 வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க.. உங்க குடும்பம் பெரிய அளவுல வளர இந்த குழந்தை முக்கிய காரணமாய் இருக்கும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஆச்சரியமடைகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























