மேலும் அறிய

Mari Selvaraj: திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது - இயக்குனர் மாரி செல்வராஜ்

திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

எழுச்சித் தமிழர் இலக்கிய விருது:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கினார். மாமன்னன் படத்துக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை. அதனை அளவிட முடியாதது. அதனை திரைக்கதை வடிவமாக மாற்ற முடியாது. முக்கியமாக நிஜத்தையே அனுமதிக்காத சென்சார் போர்டு என்னுடைய கோபத்தை மட்டும் அனுமதித்து விடுமா?. நான் இதுவரை பதிவு பண்ணியது எல்லாமே என்னிடம் இருந்த நிஜம் அவ்வளவு தான்.

நம்ப வைத்த திருமா பேச்சு:

அதை கோபமாக மாற்றினால் அதன் வீச்சு வேறு மாதிரி இருக்கும். அதைவிட அவசியம் என்னவென்று பார்த்தால் வரப்போகும் தலைமுறைகளுக்கு நிஜத்தை, வலியை வெளிப்படுத்துவதன் மூலமாக அவர்கள் இந்த சமூகத்தில் நுழையும்போது முழுவதுமாக தயார் படுத்த வேண்டும். அந்த கடமை எனக்கு இருக்குன்னு  திருமாவளவனின் பேச்சு தான்  நம்ப வைத்தது. 

பரியேறும் பெருமாள் படத்தில் அப்பா நிர்வாணமாக ஓடி வரும் காட்சியை நினைத்து நிறைய பேரு ஃபீல் செய்தார்கள். நான் அப்ப யோசிப்பேன். நான் 3 படங்கள் கொடுத்த நிலையில் அது இவ்வளவு பெரிய வன்மத்தை, கோபத்தை கிளறி விடுகிறது என்றால், என்னுடைய வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கும்போது திருமாவளவனின் வெற்றியை, எழுச்சியை புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும்? இந்த சமூகம் அதை புரிந்துக் கொள்கிறதோ இல்லையோ, தன் பக்குவப்பேச்சால் கேட்கக்கூடிய காதுகள் குறைந்தப்பட்ச நேர்மையை நோக்கி நகர்த்த கூடிய வேலையை திருமாவளவன் செய்துக் கொண்டிருக்கிறார். 

திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பு:

நான் சென்னை வந்தவுடன் இயக்குநர் ராமிடம் என்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தேனோ, இயக்குநர் பா.ரஞ்சித்தை நம்பி ஒப்படைத்தேனோ அதே மாதிரி இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனுடன் இருந்தது ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அது பயத்தினால் வரும் பாதுகாப்பு அல்ல. தொடர்ந்து என்மீது சுமத்தக்கூடிய அவசியமற்ற பெருமைகளில் இருந்து என்னை பாதுகாப்பதே வேலையாக உள்ளது. 

இந்தியா எங்கும் பெருமை அரசியல் உள்ளது. அதனை கொடுப்பதால் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. அப்படியான நிலையில் ஒரே ஒரு ஆள் மட்டும் நிலைநிறுக்கிறார் என்றால் அது திருமாவளவன் தான். ஒரு பெரும் கூட்டத்தை யார் வேண்டுமானாலும் மடைமாற்றம் செய்து பள்ளத்தில் தள்ளி விடலாம். ஆனால் ஒரு சிறுத்தை கூட்டத்தை தனியாளாக திருமாவளவன் நிலை நிறுத்துகிறார்.  அது சாதாரண விஷயம் அல்ல” என மாரி செல்வராஜ் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
Embed widget