மேலும் அறிய

Mari Selvaraj: திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது - இயக்குனர் மாரி செல்வராஜ்

திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

எழுச்சித் தமிழர் இலக்கிய விருது:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கினார். மாமன்னன் படத்துக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை. அதனை அளவிட முடியாதது. அதனை திரைக்கதை வடிவமாக மாற்ற முடியாது. முக்கியமாக நிஜத்தையே அனுமதிக்காத சென்சார் போர்டு என்னுடைய கோபத்தை மட்டும் அனுமதித்து விடுமா?. நான் இதுவரை பதிவு பண்ணியது எல்லாமே என்னிடம் இருந்த நிஜம் அவ்வளவு தான்.

நம்ப வைத்த திருமா பேச்சு:

அதை கோபமாக மாற்றினால் அதன் வீச்சு வேறு மாதிரி இருக்கும். அதைவிட அவசியம் என்னவென்று பார்த்தால் வரப்போகும் தலைமுறைகளுக்கு நிஜத்தை, வலியை வெளிப்படுத்துவதன் மூலமாக அவர்கள் இந்த சமூகத்தில் நுழையும்போது முழுவதுமாக தயார் படுத்த வேண்டும். அந்த கடமை எனக்கு இருக்குன்னு  திருமாவளவனின் பேச்சு தான்  நம்ப வைத்தது. 

பரியேறும் பெருமாள் படத்தில் அப்பா நிர்வாணமாக ஓடி வரும் காட்சியை நினைத்து நிறைய பேரு ஃபீல் செய்தார்கள். நான் அப்ப யோசிப்பேன். நான் 3 படங்கள் கொடுத்த நிலையில் அது இவ்வளவு பெரிய வன்மத்தை, கோபத்தை கிளறி விடுகிறது என்றால், என்னுடைய வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கும்போது திருமாவளவனின் வெற்றியை, எழுச்சியை புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும்? இந்த சமூகம் அதை புரிந்துக் கொள்கிறதோ இல்லையோ, தன் பக்குவப்பேச்சால் கேட்கக்கூடிய காதுகள் குறைந்தப்பட்ச நேர்மையை நோக்கி நகர்த்த கூடிய வேலையை திருமாவளவன் செய்துக் கொண்டிருக்கிறார். 

திருமாவளவனுடன் இருப்பது பாதுகாப்பு:

நான் சென்னை வந்தவுடன் இயக்குநர் ராமிடம் என்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தேனோ, இயக்குநர் பா.ரஞ்சித்தை நம்பி ஒப்படைத்தேனோ அதே மாதிரி இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனுடன் இருந்தது ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அது பயத்தினால் வரும் பாதுகாப்பு அல்ல. தொடர்ந்து என்மீது சுமத்தக்கூடிய அவசியமற்ற பெருமைகளில் இருந்து என்னை பாதுகாப்பதே வேலையாக உள்ளது. 

இந்தியா எங்கும் பெருமை அரசியல் உள்ளது. அதனை கொடுப்பதால் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. அப்படியான நிலையில் ஒரே ஒரு ஆள் மட்டும் நிலைநிறுக்கிறார் என்றால் அது திருமாவளவன் தான். ஒரு பெரும் கூட்டத்தை யார் வேண்டுமானாலும் மடைமாற்றம் செய்து பள்ளத்தில் தள்ளி விடலாம். ஆனால் ஒரு சிறுத்தை கூட்டத்தை தனியாளாக திருமாவளவன் நிலை நிறுத்துகிறார்.  அது சாதாரண விஷயம் அல்ல” என மாரி செல்வராஜ் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Embed widget