மேலும் அறிய

’தூக்கில் தொங்கியபடி இருந்தார்; என் அம்மாவுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது...’ - கோரிக்கை வைத்த கல்யாணி!

தன் அம்மா தற்கொலை செய்தது குறித்தும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடிகை கல்யாணி தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையில் ’அண்ணாமலை’, ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’உள்ளிட்ட தொடர்களிலும், அதன் பின் வெள்ளித் திரையில் அள்ளித் தந்த வானம், ஜெயம், ரமணா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும் 90ஸ் கிட்ஸ்களிடம் பிரபலமானவர் நடிகை கல்யாணி.

நடிகை டூ பிரபல தொகுப்பாளினி...

பின்னர் சில ஆண்டுகளில் வளர்ந்ததும் இவர் ’பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10 வரை’, ’மறந்தேன் மன்னித்தேன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வெள்ளித்திரையில் இருந்து விலகி மீண்டும் சின்னத்திரையில் ரீ எண்ட்ரீ கொடுத்தார். பிரபல தொகுப்பாளினி பாவனாவுடன் இவர் இணைந்து நடத்திய ’பீச் கேர்ள்ஸ்’ என்ற கலந்துரையாடல் தொடர், 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


’தூக்கில் தொங்கியபடி இருந்தார்; என் அம்மாவுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது...’ - கோரிக்கை வைத்த கல்யாணி!

அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் நடித்தார். பின்னர் ரோஹித் எனும் மருத்துவரை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து திருமணத்துக்குப் பின் அவர் மீண்டும் ரீ என்ட்ரீ கொடுத்துள்ள நிலையில், சின்னத்திரையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

அம்மா குறித்து உருக்கமான பதிவு...

இந்நிலையில், தன் அம்மா தற்கொலை செய்து கொண்டது குறித்து தன் இன்ஸ்டாகிராமில் கல்யாணி பகிர்ந்துள்ள பதிவு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில், ”24 டிசம்பர் 2014. நான் இரண்டு ஆத்மாக்களை அன்று இழந்தேன். சாதாரணமாக ஆரம்பித்த அந்த நாள் என் வாழ்வின் மிகக் கொடூரமான நாளாக மாறியது. என் அம்மாவும் நானும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தோம். அன்று நான் வழக்கப்படி என் அம்மாவுடன் ஜிம்முக்கு செல்லத் தயாராகி வந்து அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.

அவர் கதவைத் திறந்தபோது உற்சாகமாக இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும் இருந்தார். தொடர்ந்து அவருக்கு கொஞ்சம் ஜூஸ் போட்டு கொடுத்துவிட்டு தயாராக சொல்லி விட்டு வெளியே சென்றேன்.

பின் 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து வாசலில் மணியை பல முறை அடித்தேன் ஆனால், கதவு திறக்கப்படவில்லை. எனக்கு பதற்றம் அதிகமானதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே ஓடினேன். அப்போது, என் அம்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kalyani Rohit➖Project kintsugi (@kalyanirohit)

மீட்டெடுத்த கணவர்...

 
அம்மா தற்கொலை செய்துகொண்ட போது எனக்கு வயது 23 தான். அன்று முதல் என் வாழ்க்கை அடியோடுமாறிவிட்டது. என் அம்மா என் சிறந்த தோழி, அவர் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

என் அம்மா நீண்ட நாள்கள் கவலையில் இருந்ததை நான் அவரது டைரியில் படித்து பின்னர் தான் தெரிந்து கொண்டேன். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் பின்னர் என் கணவரை சந்தித்தேன். அவரே எனக்கு பெரும் உதவி செய்து, மன உளைச்சலில் இருந்த என்னை மீட்டெடுத்தார்.

நமக்கு உதவ உலகில் பலரும் தயாராக உள்ளனர். ஆனால் நாம் அழைக்கும் உதவி எண்கள் பலவும் செயலற்றே உள்ளன. நான் அதை மாற்ற விரும்புகிறேன். தங்களுக்கு உதவி கிடைக்காத நிலையில் எவரும் தன் அன்னையை இதுபோல் இழக்கக் கூடாது.

தற்கொலை தடுப்பு உதவி எண்

இச்சூழலில், தேசிய தற்கொலை தடுப்பு உதவி வழங்கும் கிரண் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கான வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், மக்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு 24x7 டெலி கவுன்சிலிங் வழங்கும்படி இந்தியாவின் அனைத்து ஓடிடி தளங்களிலும் இந்த எண் பகிரப்பட வேண்டும். 

அத்தளங்களில் நிகழ்ச்சி தொடங்கும்போதும், முடியும்போதும் இந்த எண்களை பார்வையாளர்களுடன் பகிர்வது பெருமளவு உதவி செய்யும், வேண்டியவர்களை சென்றடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

கல்யாணியின் இந்த நெடிய பதிவுக்கு அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு அவரை வாழ்த்தியும் வரும் வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Karthigai Deepam: கல்யாண நாளில் உயிருக்கு ஆபத்து.. மனைவியை காப்பாற்றுவானா கார்த்திக்?
Karthigai Deepam: கல்யாண நாளில் உயிருக்கு ஆபத்து.. மனைவியை காப்பாற்றுவானா கார்த்திக்?
Kamal Haasan: கமல்ஹாசனுக்கு கௌரவம்.. பைடி ஜெய்ராஜ் விருது வழங்கி சிறப்பித்த தெலங்கானா அரசு!
Kamal Haasan: கமல்ஹாசனுக்கு கௌரவம்.. பைடி ஜெய்ராஜ் விருது வழங்கி சிறப்பித்த தெலங்கானா அரசு!
ஒரு பெண்ணுக்கு பிரச்னையே இன்னொரு பெண் தான்.. பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
ஒரு பெண்ணுக்கு பிரச்னையே இன்னொரு பெண் தான்.. பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
Embed widget