மேலும் அறிய

Ajithkumar: 'அஜித் மாதிரி மருமகன் கிடைச்சது அதிர்ஷ்டம்' - நெகிழ்ச்சி பொங்கி பேசிய ஷாலினியின் தந்தை! - ரசிகர்கள் மகிழ்ச்சி!

அஜித் மாதிரி ஒரு பண்பான மருமகன் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம் என நடிகை ஷாலினியின் அப்பா ஏ.எஸ்.பாபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அஜித் மாதிரி ஒரு பண்பான மருமகன் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம் என நடிகை ஷாலினியின் அப்பா ஏ.எஸ்.பாபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், அமர்க்களம் படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் ஜோடிகளாக அஜித் - ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.  

இப்படியான நிலையில், நடிகை ஷாலினியின் அப்பாவான ஏ.எஸ்.பாபு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், அஜித் பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார். அதில், “'அமர்க்களம்' ஷூட்டிங்கில் தான் இரண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க. அப்ப எனக்கு இந்த விஷயம் தெரியாது. ஒருநாள் அஜித்தே ஷூட்டிங்ல இருக்கும்போது என்கிட்ட வந்து, 'அங்கிள்.. உங்க வீட்டுக்கு வரலாமா? உங்களையும் ஆன்ட்டியையும் நேரில் பார்த்துப் பேச வேண்டும் என சொன்னார். நான் ஏதோ சினிமா விஷயம் பேசப்போறாருன்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்த அஜித் எதையும் யோசிக்காம டக்குன்னு 'உங்க மகள் ஷாலினியை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா?'ன்னு நேரடியாகவே கேட்டார். 

அவர் அப்படி நேரடியாக கேட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சி போச்சு.  ஆனாலும் உடனே ஓகே சொல்ல எனக்கு சின்ன தயக்கம் இருந்துச்சு. காரணம் அந்நேரம் ஷாலினியும் முன்னணி நடிகையாக இருந்தா. அதன்பிறகு ஷாலினிக்கும் இதில் விருப்பம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு தான் பிள்ளையோட விருப்பம் தான் முக்கியம் என்று பச்சைக்கொடி காட்டினோம்.

மேலும் இரண்டுநாள் கழிச்சு அஜித்தோட அப்பா, அம்மா, சகோதரர்கள் எங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேச, அவங்களுக்கும் ஷாலினியை ரொம்பப் பிடிச்சு போச்சு. கல்யாணத் தேதியும் முடிவானது. எப்படி நிச்சயம் ஆன அன்றைக்கு சந்தோஷமா பேசி சிரித்தோமோ இப்பவரைக்கும் அதேமாதிரி இரண்டு குடும்பமும் ஒற்றுமையாவும் சந்தோஷமாவும் இருக்கோம். அஜித் இரண்டு குடும்பத்தையும் அப்படித் தாங்குறார்.

அதேபோல் ஷாலினிக்கும் அஜித்துக்கும் ஜாதகம் பார்த்தப்போ, 'பத்துப் பொருத்தமும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை,இன்னொரு மகன்தான்.  அவர்கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயமே உபசரிப்புதான். வீட்டில் உள்ள வேலை ஆட்களைக் குடும்ப உறுப்பினர் போல நடத்துவார். எங்களை முதன்முதலாக பார்த்தபோது, எப்படி மரியாதையாவும் அன்பாகவும்நடந்துக்கிட்டாரோ, அந்த அளவு துளி கூட இன்னைக்கு வரையும் குறையல.

என்னைக்கும்  நாம உயரத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்க மாட்டார்.  மருமகனின் அந்த குணம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். சினிமால மிகப்பெரிய ஹீரோ எனக்கு மருமகனாக  வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷாலினி, ரிஷி, ஷாம்லி ஆகிய 3 பிள்ளைகளும் கடவுள் கொடுத்த வரம்னா, அஜித் மாதிரி ஒரு பண்பான மருமகன் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்‘ என அந்த நேர்காணலில்  ஏ.எஸ். பாபு  கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Kalaignar Magalir Urimaithogai: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவில்லையா? - இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம், எப்படி?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget