மேலும் அறிய

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்து போனேன்.. அமீர்கான் ஓபன் டாக்

சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்தவாரம் வெளியான சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படம் குறித்த நேர்காணலில் பேசிய அமீர்கான், சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். மேலும், இப்படம் குறித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்திருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

100 கோடி வசூல்

சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டு சாம்பியன் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை அமீர்கான் தனது நிறுவனத்தின் பெயரிலேயே தயாரித்து நடித்துள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கானுடன் ஜெனிலியாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ.100 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மனம் உடைந்து போனேன்

சித்தாரே ஜமீன் பர் படத்தில் முதலில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் இப்படத்தை தயாரிக்கவே முடிவு செய்ததாக அமீர்கான் பேசியுள்ளார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டியளித்த அவர், லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு சினிமாவில் பிரேக் எடுத்துக்கொள்ளலாம் என்றே நினைத்தேன். அப்படம் என்னை மனதளவில் பாதிப்பை தந்தது. மனம் உடைந்து போனேன். இதையும் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் கூறினேன். அவர்தான் என்னிடம் சார் நீங்க நடிக்கலைனாலும், படங்களை தயாரிப்பாளராக சினிமாவில் தொடருங்கள் என்று அவர் என்னிடம் கூறினார். அதன்பிறகே படங்களை தயாரிக்க முடிவு செய்ததாக அமீர்கான் தெரிவித்தார். 

சித்தாரே ஜமீன் பர் தயாரிக்க காரணம்

சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதையை முதலில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயனிடம் கூறினோம். இப்படத்தின் கதை இருவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. இதனால், தமிழ் மற்றும் இந்தியில் இப்படத்தை எடுக்க முடிவு செய்தோம். தமிழில் சிவகார்த்திகேயனும், இந்தியில் ஃபர்ஹான் அக்தரும் நடிக்க இருந்தார்கள். சிவகார்த்திகேயனிடம் படத்தில் நடிப்பதற்கான ஓப்பந்தம் செய்து கால்ஷீட் வாங்கியாச்சு. ஆனால், கதை விவாதத்தின் போது சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதையில் நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை வந்தது. 

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு

இப்படத்தில் நடிப்பதற்கான விருப்பத்தை இயக்குநரிடம் தெரிவித்தேன் அவரும் ஏற்றுக்கொண்டார். பிறகு, ஃபர்ஹான் அக்தரிடமும், சிவகார்ததிகேயனிடமும் இதுகுறித்து தெரிவித்தேன். இருவருக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. சிவகார்த்திகேயனிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன். அவரும் புரிந்துகொண்டார். பிறகுதான் இப்படத்தில் நடித்து முடித்தேன் என அமீர்கான் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget