மேலும் அறிய

A.R.Rahman: பாலிவுட்னு சொல்ல மாட்டேன்... இந்தியா முழுவதும் பல திறமைசாலிகள் உள்ளனர்... ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!

உலகமே பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் என தவறாக நம்பிக்கொண்டு இருக்கிறது. ஹாலிவுட் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான் பாலிவுட். இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை.

90களில் தமிழ் சினிமாவில் ஒரு புயலைப் போல அனைவரையும் தாக்கியவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். தென்னிந்திய சினிமா, பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் தனது பெயரை நிலைநாட்டிய ஏ.ஆர். ரஹ்மான் திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 

இசை மூலம் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான், சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டு இருந்ததால் அதன் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை ஜாம்பவான்களின் இசைக்குழுவில் பணியாற்றியவர். பின்னாளில் லண்டன் இசைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்றார். 

 

A.R.Rahman: பாலிவுட்னு சொல்ல மாட்டேன்... இந்தியா முழுவதும் பல திறமைசாலிகள் உள்ளனர்... ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!

திரையுலகில் அறிமுகம் :

விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வந்தவரை 1992ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். ‘என்னடா இது புதுசா இருக்கே’ என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

அடுத்து அவர் எடுத்து வைத்த அடி அனைத்துமே வெற்றிப்படிகளாகவே இருந்தன. 'ஸ்லம்டாக் மில்லியினர்' படத்துக்காகவும் ஜெய் ஹோ பாடலுக்காகவும் ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருதையும்  கைப்பற்றியவர். இப்படி நம்பர் 1 இசையமைப்பாளராகத் திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தனது 30 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

பாலிவுட் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் கருத்து :

அதில் அவர் பேசுகையில் “உலகமே பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் என தவறாக நம்பிக்கொண்டு இருக்கிறது. ஹாலிவுட் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான் பாலிவுட். இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை. அப்படி யாராவது பயன்படுத்தினாலும் நான் அவர்களை திருத்துவேன். 

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை கைப்பற்றியதில் மிக்க மகிழ்ச்சி. 

 

A.R.Rahman: பாலிவுட்னு சொல்ல மாட்டேன்... இந்தியா முழுவதும் பல திறமைசாலிகள் உள்ளனர்... ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!

இந்தியா வானவில் போன்றது :

இங்கும் அற்புதமான திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களை இந்த உலகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டியது அவசியம். அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளும் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டால் நிச்சயம் அவர்களும் நல்ல படைப்புகளுடன் வெளிய வர முடியும்.

அவர்கள் மூலம் வெளிவரும் படைப்புகள் இந்தியாவை போல பலதரப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வெறும் ஒரு கலாச்சாரம் மட்டும் கொண்டது அல்ல. வானவில்லைப் போல பல வண்ணமயமான கலாச்சாரங்களின் கூட்டணி தான் இந்தியா.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் :

திரைப்படங்களுக்கு இசையமைத்ததால் மட்டுமே உதவிகள் கிடைக்குமென்பதை ரோஜா படத்துக்கு இசையமைக்கும் முன் உணர்ந்தேன். எனக்கு மணிரத்னம், ராம்கோபால் வர்மா, ஷங்கர், சுபாஷ் போன்ற பல நல்லுள்ளம் கொண்ட நண்பர்களும் உறவுகளும் கிடைக்கப் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டேன்” எனத் தெரிவித்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget