மேலும் அறிய

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பானை சின்னமா இல்ல உதயசூரியன் சின்னமா? - குழப்பத்தில் மக்கள்... விழிபிதுங்கி நிற்கும் திமுகவினர்

நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் உதயநிதி, அமைச்சர் பொன்முடி, என பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று முன்தினம் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் மாதிரி வாக்கு பதிவு, வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியீடு மற்றும் சின்னம் ஒதுக்குதல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த  முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னமும் ,பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கும் மாம்பழம்  சின்னமும்,  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவிற்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டன.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நான்கு பேர் பானை சின்னம் வேண்டுமென்று கேட்டிருந்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் குலுக்கல் முறையில் பானை சின்னத்தை சிவசக்தி என்பவருக்கு ஒதுக்கீடு செய்தார். 

இடைத்தேர்தலில் பானை சின்னம் இடம்பெற்றதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். நேற்று மாலை நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் பொன்முடி இடம் பானை சின்னம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அப்போது கடுப்பான அமைச்சர் பொன்முடி அருகில் இருந்தவர்களை திட்டி தீர்த்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் என அனைவரையும் தொடர்பு கொண்டு சின்னத்தை வழங்கக் கூடாது என அதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என தொலைபேசி மூலம் வற்புறுத்தினார். இருப்பினும் சின்னம் ஒதுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி இளைஞர்களிடம் பேசும்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பானை சின்னத்தை வைத்து திசை திருப்புவதற்காக சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது இது தேர்தல் ஆணையத்தின் வேலை என்றும் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கடந்த மாதத்திற்கு முன்பு பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் பொன்முடி, அமைச்சர் உதயநிதி என பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் 90,000 வாக்குகள் பானை சின்னத்திற்கு கிடைத்தது. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பானை சின்னம் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது சுவர் விளம்பரம் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வரையப்பட்டிருந்தது  தற்போது வரை அகற்றப்படாமல் இருப்பதினால் பொதுமக்கள் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
46 வயதில் 61 தேர்தல்கள்! மதுராந்தகம் இடைத்தேர்தலில் களம் காணும் ‘அக்னி’ ஆழ்வார்!
46 வயதில் 61 தேர்தல்கள்! மதுராந்தகம் இடைத்தேர்தலில் களம் காணும் ‘அக்னி’ ஆழ்வார்!
Madurantakam By Election: பாமகவை நம்பும் இபிஎஸ்.. அன்புமணி எடுக்கப்போகும் முடிவு என்ன? மதுராந்தகத்தில் பரபரப்பு!
Madurantakam By Election: பாமகவை நம்பும் இபிஎஸ்.. அன்புமணி எடுக்கப்போகும் முடிவு என்ன? மதுராந்தகத்தில் பரபரப்பு!
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்... 2.13 லட்சம் வாக்காளர்கள் தயார்!
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்... 2.13 லட்சம் வாக்காளர்கள் தயார்!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget