மேலும் அறிய

TN Local Body Election 2022 | சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மந்தம்

முதல் நாளான இன்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் பாரத மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கதிர்வேல் என்பவர் முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என நேற்று மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிக்கு வரும் 19 ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியது. முதல் நாளான இன்றைய தினம் அதிகளவில் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு படிவங்களைப் பெற்றுச் சென்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபர்கள் கூட்டமாக வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு தேர்தல் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

TN Local Body Election 2022 |  சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மந்தம்

முதல் நாளான இன்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் பாரத மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கதிர்வேல் என்பவர் முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள நான்கு மண்டலங்களில் தலா 15 வார்டுகள் விகிதம் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் இதுவரை ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

 

ஆறு நகராட்சிகளான

 

1. ஆத்தூர் - 33 வார்டுகள்

2. மேட்டூர் - 30 வார்டுகள்

3. எடப்பாடி - 30 வார்டுகள்

4. நரசிங்கபுரம் - 18 வார்டுகள்

5. தாரமங்கலம் - 27 வார்டுகள்

6. இடங்கணசாலை - 27 வார்டுகள்

TN Local Body Election 2022 |  சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மந்தம்

கடந்த நகராட்சி தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சி கொண்டிருந்த நிலையில் தற்போது தாரமங்கலம் பேரூராட்சி மற்றும் இடங்கணசாலை பேரூராட்சி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், சேலம் மாவட்டத்தில் தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளது. சேலம் நகராட்சியாக இருந்து 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை நான்கு முறை மேயர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மூன்று முறை மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருமுறை மட்டும் வார்டு கவுன்சிலர்களுக்கு மறைமுக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget