மேலும் அறிய

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

விடுதியில் வார்டனாக சேர்ந்த 2 மாதங்களே ஆன காயத்திரி என்பவரிடமும், மாணவி வயிற்று வலியால் துடித்தபோது, அவருக்கு முதலுவதி சிகிச்சை அளித்த ஒய்வு பெற்ற அரசு செவிலியர் ஜெசிந்தா என்பவரிடம் விசாரணை

அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதியில் தங்கியிருந்த போது கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பூச்சிமருந்து குடித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜன. 19 ஆம் தேதி இறந்தார். விடுதி வார்டன் சாகயமேரி தன்னை, விடுதியில் அறையை சுத்தம் செய்ய சொன்னதாலும், வரவு செலவு கணக்குகளை எழுத சொல்லி வார்டன்  திட்டியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக  விடுதி வார்டன் சகாயமேரி மீது, மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்பட யில், திருக்காட்டுப்பள்ளி போலீஸார்  கைது செய்தனர். தற்போது  அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

இதற்கிடையில் ஜனவரி 17 ஆம் தேதி, மாணவி சிகிச்சையில் இருந்தபோது, இந்து முன்னனி மாவட்ட செயலாளர் முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில்,  தன்னை மதம் மாற பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக கூறிய வீடியோ வெளியானது.  இந்த செல்போன் வீடியோ பதிவு  டிஎஸ்பி பிருந்தா விடம், ஒப்படைக்கப்பட்டது. மேலும், பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால் தான், தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என, மாணவியின் தந்தை முருகானந தம்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

இதற்கிடையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று, தஞ்சாவூர்  நீதிமன்றத்தில் நீதிபதி முன் இரண்டரை மணி நேரம் பள்ளி மாணவியின் பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த  ஜனவரி 31ஆம் தேதி பள்ளி மாணவி லாவன்யா தற்கொலை தொடர்பாக சுமார் மூன்றரை மணி நேரம் 20 பேரிடம் விசாரணை செய்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், போலீசார்,  மருத்துவர்கள், பள்ளிக்கு ஆதரவானவர்கள், மாணவியின் தாத்தா, பாட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.  


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில், கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, டிஎஸ்பிக்கள் ரவி, சந்தோஷ் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர், 21 ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதிக்கு வந்தனர். அங்கு முதலில் திசைக்காட்டும் கருவியை கொண்டு அதன்படி பள்ளி விடுதி, கன்னியாஸ்திரிகள் தங்கும் கட்டிடங்கள், வகுப்பறை,மற்றும் மாணவி தங்கியிருந்த அறை, ஆசிரியர்கள் தங்கும் அறை, கன்னியாஸ்திரிகள் தங்கும் அறை என அனைத்து பகுதிகளையும்  வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்தனர். அதே போல் பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்களிடமும் விசாரணையை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர்.


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

இந்நிலையில் காலை 12.20 மணிக்கு தொடங்கிய விசாரணையில் சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி, கண்காணிப்பாளர் நிர்மலாதேவி ஆகியோர் 3.20 மணிக்கு புறப்பட்டு திருக்காட்டுப்பள்ளி பயணியர் தங்கும் விடுதிக்கு சென்றனர். இதனை தொடர்ந்து மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர்கள் மாலை 5.50 வரை விசாரணை செய்து விட்டு புறப்பட்டு சென்றனர், அப்போது அதிகாரிகளிடம் கேட்ட போது, இன்றுடன் இப்பள்ளியில் விசாரணை முடிந்தது. மாணவிகளிடம் விசாரணை செய்ய வில்லை என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

இது குறித்து மாணவியின் தோழி கூறுகையில், என்னிடம் அம்மாணவியை பற்றி கேட்டனர். பள்ளி நிர்வாகிகள், மதம் மாற கூறினார்களா என்று கேட்டனர். அதற்கு நான் இல்லை என்றேன். நாங்கள் கடந்த ஜன.  9 ஆம் தேதி ஒன்றாக தங்கியிருந்த போது, அவருக்கு வயிற்று வலி வந்தது. உடனே, பள்ளி நிர்வாகிகள், அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.  அந்த மாணவி, யாருடனும் அதிகமாக பேசமாட்டார். இங்கேயே தான் இருப்பார் என்று கூறினேன். இது போல் சுமார் அரை மணி நேரம் என்னிடம் விசாரணை செய்தார்கள். பின்னர் சிலமாணவிகளிடமும் விசாரணை செய்தனர். மாணவி, தற்கொலை பிரச்சனையை தொடர்ந்து விடுதி மூடப்பட்டதால், தினந்தோறும் வடுகம்பாளையத்திலிருந்து சுமார் 3 மணி நேரம் பஸ்சில் சென்று வருகின்றோம். நாங்கள் பிளஸ் 2 படிப்பதால், எங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் விடுதியை திறக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.


தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை

இதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி பயணியர் விடுதியில், விடுதியில் வார்டனாக பணிக்கு சேர்ந்த 2 மாதங்களே ஆன காயத்திரி என்பவரிடமும், மாணவி வயிற்று வலியால் துடித்தபோது, அவருக்கு முதலுவதி சிகிச்சை அளித்த ஒய்வு பெற்ற அரசு செவிலியர் ஜெசிந்தா என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், எங்களை ஒன்றும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்கள் என கூறி கதவினை தாழிட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
அப்படிப்போடு. மிஷினில் வேட்பாளர் படங்கள்.. தபால் ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்.. தேர்தல் அப்டேட் இதோ!
அப்படிப்போடு. மிஷினில் வேட்பாளர் படங்கள்.. தபால் ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்.. தேர்தல் அப்டேட் இதோ!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
“கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!
பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!
MG Comet EV on EMI: செல்லக்குட்டி MG காமெட் EV-அ லோன்ல வாங்குற ஐடியா இருக்கா.? அப்போ வாங்க, EMI எவ்ளோன்னு பார்ப்போம்
செல்லக்குட்டி MG காமெட் EV-அ லோன்ல வாங்குற ஐடியா இருக்கா.? அப்போ வாங்க, EMI எவ்ளோன்னு பார்ப்போம்
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Embed widget