மேலும் அறிய

பஞ்சாயத்து நிதியில் முறைகேடு - மதுரை ஆட்சியர் பதில் தர நீதிமன்றம் நோட்டீஸ்

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சேக்கிபட்டி பஞ்சாயத்து தலைவர் பிரியா மற்றும் துணைத் தலைவர் கலைவாணி ஆகியோர் பஞ்சாயத்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அசாருதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சேக்கிபட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக பிரியா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். கலைவாணி என்பவர் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் பிரியா சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்து 735 ரூபாய் மதிப்பிலான, நாற்பத்தி ஏழு காசோலைகளையும், துணைத்தலைவர் கலைவாணி சுமார் 72 ஆயிரத்து 380 ரூபாய் மதிப்பிலான 9 காசோலையும்,  அட்மின் என்னும் பெயரில் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளையும் தண்ணீர் குழாய் அமைத்து பராமரிப்பது  மற்றும் வேறு பராமரிப்பு பணிகள் என கூறி பெற்றுள்ளனர்.
 
இதுவரையிலும் 6 முறை பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று உள்ளது. அதற்காக 32,000 ரூபாய் மட்டுமே பஞ்சாயத்து நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சேக்கிபட்டி பஞ்சாயத்து தலைவர் பிரியா மற்றும் துணைத் தலைவர் கலைவாணி ஆகியோர் பஞ்சாயத்து நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். பஞ்சாயத்துக்களின் வரவு, செலவு கணக்குகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபோதே, இந்த முறைகேடு எங்களுக்கு தெரிய வந்தது. சேக்கிப்பட்டி பஞ்சாயத்தில் தண்ணீர் குழாய் அமைப்பது, பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால் இதற்கான தொகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
 
இதற்கு அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே இருவர் மீதும் முறையான விசாரணையை மேற்கொண்டு, அவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு குறித்து, ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

 
கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தரக்கோரிய வழக்கு மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 
 
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த ஆரோக்கியசாமி பிரிட்டோ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " சத்திஸ்கரை சேர்ந்த 33 பேர் சிவகாசியில் உள்ள ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்டு கம்பெனியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக வீடியோ ஒன்றின் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றது. அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட உதவிகள் மையம் மற்றும் விருதுநகர் வருவாய் அலுவலர் உதவியால், கடந்த 2020 டிசம்பர் 4ஆம் தேதி 22 ஆண்கள் 9 பெண்கள் 2 குழந்தைகள் என மொத்தம் 33 பேர் மீட்கப்பட்டனர். அன்றைய தினமே,  அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு சட்டிஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர்.
 
கொத்தடிமைகள் தடுப்பு சட்டப்படி மீட்கப்படுவோருக்கு விடுவிப்பு சான்றிதழும், 20 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.  ஆனால் இதுவரை அவர்களுக்கான விடுவிப்பு சான்றும்,  தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, சிவகாசியில்  கொத்தடிமைகளாக பணியாற்றி மீட்கப்பட்ட 33 பேருக்கும் விடுவிப்பு சான்றிதழ் மற்றும் தலா 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு வழக்கை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
Embed widget