மேலும் அறிய

வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது. சென்னையைப் பொறுத்தவரையிலும் மத்திய சென்னை, வட சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு மையத்தில் ஆய்வு:

இந்த நிலையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ராணி மேரி கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், வட சென்னை தேர்தல் பொறுப்பாளர் ரவி தேஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "வாக்கு எண்ணும் மையங்களை இன்று ஆணையருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலராக கூட்டாக ஆய்வு செய்தோம். யாராக இருந்தாலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்குள் செல்ல முடியாது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

104 சி.சி.டி.வி. கேமராக்கள்:

14 மேசைகள் அமைத்து வாக்குகளை எண்ணவும், 16 கேமராக்கள் பாதுகாப்பிற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளும் அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா? என்பதனை ஆய்வு செய்தோம். வட சென்னை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க 104 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் வசதி:

சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய தடையில்லா மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

4 அடுக்கு பாதுகாப்பு:

பின்னர், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒரு பணி நேரத்தில் 140 அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் சரியாக இருக்கிறதா? என்பதை தினமும் எங்களுக்கு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு கொடுப்போம்."

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களிலும் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Embed widget