மேலும் அறிய
மதுரையின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என துணை மேயர் பேட்டி !
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு - துணைமேயராக பதவி ஏற்பு - பதவியேற்பின் போது கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க என முழக்கமிட்ட எம்.பி.

துணை_மேயர்
1971ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வரும் மதுரை தற்போது 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த மதுரை முத்து 1980ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தார். இறுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு மூலம் அதிமுகவை சேர்ந்த வி.வி.ராஜன் செல்லப்பா மேயரானார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரை மாநகராட்சியில் வாக்குபதிவு நடந்து முடிந்துள்ளது.


அப்போது மாமன்ற கூட்டத்தில் அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்க கம்யூனிஸ்ட் என முழக்கமிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில்...,” மதுரை மாநகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவியை ஒதுக்கியமைக்கும், மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி எனவும், மக்களுக்கான சேவையை தொடர்வோம்” என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைமேயர் நாகராஜன் பேசுகையில்..,” மதுரையின் உட்கட்டமைப்பிற்கான 27கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரிடம் வழங்கியதையடுத்து மதுரையின் உட்கட்டமைப்பு வசதிக்காக 500கோடி ரூபாய் ஒதுக்கூட செய்த முதல்வருக்கு, தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக மதுரை மாநகராட்சியை உருவாக்க பாடுபடுவோம் என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தவறான திசையில் சென்ற திமுகவின் பிம்பம் இன்று தெளிவடைந்துள்ளது - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு



100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சிக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2ஆம் தேதி பதவியேற்ற நிலையில் இன்று காலை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மேயர் வேட்பாளரான இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மதியம் துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட வளாகத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நாகராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணைமேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



















