மேலும் அறிய

’ஒரு ரூபாய் கூட இலஞ்சம் வாங்கமாட்டேன்’ - உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

”இதன் மூலம் நான் உறுதியளிப்பது என்னவென்றால், நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் மூலம் உறுதி அளிக்கிறேன்”

வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர்.  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


’ஒரு ரூபாய் கூட இலஞ்சம் வாங்கமாட்டேன்’ - உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் 71 வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கிறிஸ்டிபன் பிரவீன் குமார்   போட்டியிடுகிறார். தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் இவர், இலஞ்சம் வாங்கமாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை வாக்களார்களுக்கு கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். 20 ரூபாய் பாண்ட் பேப்பரில், ”கோவை மாநகாராட்சியில் 71 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இதன் மூலம் நான் உறுதியளிப்பது என்னவென்றால், நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் மூலம் உறுதி  அளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜெராக்ஸ் எடுத்து மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.


’ஒரு ரூபாய் கூட இலஞ்சம் வாங்கமாட்டேன்’ - உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வது வார்டில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கோவை பீளமேடு புதூரில் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களுடன் இணைந்து கும்மி அடித்தும், நடனம் ஆடியும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டு பிரச்சுரங்களை வழங்கி அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்து, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.


’ஒரு ரூபாய் கூட இலஞ்சம் வாங்கமாட்டேன்’ - உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

கோவை மாவட்டம் பேரூர் பேருராட்சியில் 7 வது வார்டில் தி.மு.க. சார்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த பகுதி மக்களிடையே விநோத முறையில், வாக்கு சேகரித்து வருகிறார். பாரம்பரிய முறைப்படி, சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வீடு வீடாக சென்று ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் பிரபலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே எனது வார்டு இருப்பதால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வாக்கு சேகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget