மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் 182 மைதானங்களில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 45,519 மாணவ, மாணவிகள்

நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 சதவிகித மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு குடும்ப சூழலா? உடல்நிலை பாதிப்பா?, தேர்வு எழுத பயமா? அல்லது குழந்தை திருமணம் காரணமா?

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து நேற்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 89 மாணவர்கள், 4 லட்சத்து 60 ஆயிரத்து 247 மாணவியர் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு துறை கண்காணிப்பாளர்களாக 51 ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3050 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் 182 மைதானங்களில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 45,519 மாணவ, மாணவிகள்

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 23,302 மாணவர்களும், 22,217 மாணவிகளும் எனக்கு மொத்தம் 45,519 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்று 425 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வை சந்திக்கவுள்ளார் பள்ளி மாணவர்களுக்காக 176 மையங்களும், தனித்தேர்வர்களுக்கான 6 மையங்களும் என சேலம் மாவட்டம் முழுவதும் 182 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் சேலம் மாநகராட்சி கோட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகப்படியான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

சேலம் மாவட்டத்தில் 182 மைதானங்களில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 45,519 மாணவ, மாணவிகள்

மாணவர்களுக்கான இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வு அறை ஒதுக்கீடு, தேர்வு என் ஒட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாவட்டத்தில் துறை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, குழு அலுவலர்கள் என 3 ஆயிரத்து 692 கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பொது தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்வு கட்டுப்பாட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 6 இடங்களிலும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு அறைக்குள் செல்லா அனுமதித்தனர். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 182 மைதானங்களில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 45,519 மாணவ, மாணவிகள்

தேர்வு நடைபெறும் மையத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 சதவிகித மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு குடும்ப சூழலா? உடல்நிலை பாதிப்பா?, தேர்வு எழுத பயமா? அல்லது குழந்தை திருமணம் காரணமா? என்பது குறித்து கண்டரிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டம், குழந்தைகள் நல குழுமம், இல்லம் தேடி கல்வி திட்டம், ஒருங்கிணைந்த கல்வி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களை கொண்டு வீடு வீடாகச் சென்று விசாரணை செய்து மீண்டும் அவர்களை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Embed widget