மேலும் அறிய

போலீஸ் மீது குற்றம் சாட்டிய மணல் மாஃபியா சுதாகர் கைது

தன்னை மணல் கடத்தக் கூறி போலீசார் மிரட்டுவதாக பேட்டியளித்த மணல் மாஃபியா சுதாகரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  கண்ணமங்கலம் மேல்நகர் கீழ்நகர் பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சுதாகர் என்பவர் மீது கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட மணல் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி கீழ்நகர் கிராமத்தில் உள்ள நாகநதி ஆற்றில் சுதாகர் டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட போது கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் அவரை பிடிக்க சென்றனர். அப்பொழுது சுதாகர் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
 டிராக்டரை பறிமுதல் செய்த கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதாகரை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீஸ் மீது குற்றம் சாட்டிய மணல் மாஃபியா சுதாகர் கைது

மேலும் தலைமறைவாக இருந்த சுதாகரை பிடிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து சுதாகரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று தனிப்படை போலீசார் சுதாகரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுதாகரிடம்  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மணல் மாஃபியா என கூறப்படும்  சுதாகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு   தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் போலீசார் 23 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார்.

 

போலீஸ் மீது குற்றம் சாட்டிய மணல் மாஃபியா சுதாகர் கைது


இது பற்றி விசாரித்த போது  சுதாகர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில டிவி சேனல்களில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் நான் மணல் வியாபாரத்தை கைவிட்டுவிட்டேன். இருந்தாலும் என்னை மணல் கடத்தும்படி கண்ணமங்கலம் காவல் துறையினர் கட்டாயப்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் பணம் எண்ணிடம் இருந்து பெற்றார்கள். சத்திய மூர்த்தி என்பவர் கூறியதன் பேரில் தனிப்பிரிவு போலிஸ் ராஜ்குமார் தான் இந்த ஏற்பாட்டை செய்தார். (ஆஸ்பத்திரியில் இருந்துக் கொண்டே இந்த வேலையை செய்தார்.)
பின்னர் இரண்டு நாள்கள் கழித்து என் வண்டியை ஆய்வாளர் சசிக்குமார் பறிமுதல் செய்யப்போகிறார் என்று ஒரு காவலர் மூலமாக எனக்கு தகவல் அளித்தார்.
அவர் சொன்னபடியே என் வண்டியை ஆய்வாளர் பறிமுதல் செய்துவிட்டார். அப்போது போலீசாரிடம் இரண்டு நாளைக்கு முன்னர் தானே ஒருலட்சம் கொடுத்தேன் என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் பொதுமக்களிடம் இருந்து  புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் கொடுத்தால் வண்டியை விட்டு விடுவதாக காவல்துறையினர் சொன்னார்கள். மொத்தம் 23 வண்டியை மணல் அள்ளுகின்றனர் . ஒரு வண்டிக்கு மாதம் 1 லட்சம் வீதம், மொத்தம் 23 லட்சம் மாதம் வசூலாகிறது.நான் சும்மா அமைதியாக இருந்தேன் என்னை மணல் கடத்த தூண்டிவிட்டதோடு, என்னிடம் மேலும் பணம் கேட்டால் நான் எங்கே போவது என்றெல்லாம் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

போலீஸ் மீது குற்றம் சாட்டிய மணல் மாஃபியா சுதாகர் கைது

அதாவது கண்ணமங்கலம் காவல்துறையினர் லஞ்ச விவகாரங்களை வெளிப்படையாக போட்டுடைத்தார் மேல்நகர் சுதாகர். இதன் அடிப்படையில் தான்  காவல்துறையினர் கைது செய்துள்ளார்களா என்கிற சந்தேகமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget