மேலும் அறிய

கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ஓடும் ரயிலில் முதன்மை டிக்கெட் பரிசோதகரை மது போதையில் தாக்கிய வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது

அலாபுலாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் தன்பாத் அலப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நாரன் மகன் ராஜா(35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் S4 ஸ்லீப்பர் கோச்சில் பயணித்துக்கொண்டு மது அருந்தி உள்ளார். இதனை பார்த்த ரயிலில் பயணித்தவர்கள் பயணச்சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆலன் என்கிற டிடிஆர் அந்த கோச்சிற்கு சென்று டிக்கெட் இருக்கிறதா ஏன் ரயிலில் அமர்ந்து மது அருந்துகிறாய் எனக் கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த வட மாநில வாலிபர் டிடிஆரை தாக்கியுள்ளார். இதனை அறிந்த முதன்மை டிக்கெட் பரிசோதகரான சென்னை பெரம்பலூர் பகுதியைச் சார்ந்த குடியப்பன் மகன் ஜோதிலிங்கம் (49) சென்று தட்டி கேட்டுள்ளார். 

இருப்பினும் மது போதையில் இருந்த வட மாநில வாலிபர் ராஜா முதன்மை டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்தை கழிவறையில் வைத்து இரும்பு கொக்கியை மூலம் தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது வட மாநில வாலிபர் ஓடும் ரயிலில் இருந்து மது போதையில் கீழே குதித்துள்ளார். அவருடன் பயணித்த இரு வட மாநில வாலிபர்களும் தப்பி ஓடிய உள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ராஜாவை ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் டிக்கெட் பரிசோதகருக்கும் வட மாநில வாலிபருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவர்கள் டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்திற்கும் வட மாநில வாலிபர் ராஜாவிற்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தலைப்பு செய்திகள்

மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
Marriage Registration : திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Embed widget