மேலும் அறிய

தஞ்சை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது

அதிகளவில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை மீன்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மீன்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணைகளில் மீன்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது அய்யம்பேட்டையை அடுத்த புள்ளமங்கை கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் ரேஷன் அரிசி 1,100 கிலோ பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.

அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வங்கி மீன் பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக பிரபாகரன் (28) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

தேசிய அளவில் தமிழ்நாட்டில் தான் பொது வினியோகத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது. ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் தற்போது இம் மாதம் முதல் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு வகையிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகளவில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை மீன்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து சோதனை நடத்தப்பட்டு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் மாவு மில்களும் ரேஷன் அரிசியை விற்பனை செய்கின்றனர். அந்தவகையில் தற்போது தஞ்சை அருகே மீன்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குடிமைப்பொருள், 1,100 கிலோ அரிசி, பறிமுதல், வாலிபர் கைது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

VP Elec CP Radhakrishnan: சிபி ராதாகிருஷ்ணன்.. தமிழ்நட்டிற்கான பாஜகவின் ஸ்கெட்ச்சா? RSS-ன் வெற்றியா? 2 மாங்கா?
VP Elec CP Radhakrishnan: சிபி ராதாகிருஷ்ணன்.. தமிழ்நட்டிற்கான பாஜகவின் ஸ்கெட்ச்சா? RSS-ன் வெற்றியா? 2 மாங்கா?
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு
TVK Maanadu Madurai | ட்ரோன் மூலம் மருந்துகள் TVK மாநாட்டில் புது ஐடியா அசந்து போன தொண்டர்கள்! Vijay
BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VP Elec CP Radhakrishnan: சிபி ராதாகிருஷ்ணன்.. தமிழ்நட்டிற்கான பாஜகவின் ஸ்கெட்ச்சா? RSS-ன் வெற்றியா? 2 மாங்கா?
VP Elec CP Radhakrishnan: சிபி ராதாகிருஷ்ணன்.. தமிழ்நட்டிற்கான பாஜகவின் ஸ்கெட்ச்சா? RSS-ன் வெற்றியா? 2 மாங்கா?
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷ ஜாதகர்கள் சுத்த ஜாதகத்தோடு இணைக்கலாமா..?
Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
நீங்களே பார்க்கலாம்
Easy-யா நீங்களே பார்க்கலாம் "திருமண பொருத்தம்"...!!!
Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
Embed widget