மேலும் அறிய

‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!

மாஜிஸ்திரேட் விசாரணையில் விஜயனிடம் விசாரிக்க 24 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த விஜயன் 'கமிஷனர்' எனக் கூறி திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி போலீசிடம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள போலீஸ் சந்தேகத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட ரகசிய தகவலால் தமிழ்நாடு காவல்துறை வாகன சோதனையின் போது பிடிபட்டார்.. பொம்மை துப்பாக்கி, அசிஸ்டென் கமிஷனர் ( Assistant Commissioner ) என்று அச்சிடப்பட்ட ஐடிகார்ட், சைரன் வைத்த பொலிரோ கார் உள்ளிட்டவையை கைப்பற்றிய பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் ஐ.பி.சி சட்டப்பிரிவு 420-இன் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!
இந்நிலையில் விஜயன் குறித்த செய்தி பரவவும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் போலிசாரிடம் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். விஜயன் குறித்து மளமளவென புகார்கள் குவிவதை கொண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  கைதான விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரநாயுடு, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண்பேடி,  ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா என முக்கிய நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவ தொடங்கியது. இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வேலை செய்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விஜயன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.  ஒரிஜனல் போலீசை விஞ்சும் அளவிற்கு டுபாக்கூர் போலீஸ் விஜயன் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணை முடிவுக்கு பின்பு தான் விஜயனின் முழு அலப்பறைகள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!
இந்நிலையில் சப்ஜெயிலில் இருந்த விஜயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் விசாரணையில் விஜயனிடம் விசாரிக்க 24 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் விஜனிடம் விசாரணை செய்கின்றனர். முக்கிய நபர்களுடன் விஜயன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பாகவும், தான் கமிஷனர் என்ற பதவியை பயன்படுத்தி எங்கு, எங்கு ஏமாற்றினார் என்பது குறித்தும் விசாரணை வலுக்கிறது.

‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!
மேலும் காவல்துறையினர் சிலர்....," சென்னையை சேர்ந்த விஜயன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த விஜயனால் அதிகளவு சம்பாரிக்க முடியவில்லை என அவரது மனைவி திட்டியதால் மனம் உடைந்த விஜயன் சீக்கிரமாக செட்டில் ஆவது எப்படி என்று சிந்திக்க தொடங்யுள்ளார். சமூகத்தில் பெரிய நபராக காட்டிக் கொள்ளவும் தமிழ்நாடு போலீஸ் கமிஷனர் வேடமணிந்து பல்வேறு இடங்கள் சுற்றுவந்துள்ளார். ஆங்காங்கே பல்வேறு பொய்களை சொல்லி மரியாதை மட்டுமின்றி கூடவே பணத்தையும் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். வெளிமாநிலங்களில் சுற்றித்திரியும் போது விஜயனின் போலித்தனம் குறித்த புகார்கள் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணையில் தற்போது விஜயன் குறித்து பூதாகர தகவல்கள் கிடைத்துள்ளது. விஜனிடம் முழு விசாரணைக்கு பின் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என்றனர்.
 

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget