மேலும் அறிய

Crime: வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மருத்துவமனையில் நடந்த கொடூரம்- கணவர் ஷாக்

Crime: வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு, மருத்துவமனையில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: குருகிராம் மருத்துவமனையில் நோயாளிக்கு,பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் கொடூர சமபவம்:

குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விமானப் பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். கடந்த 13ம் தேதிடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தனது கணவரிடம் கூறி அந்த பெண் கதறியுள்ளார். தொடர்ந்து, 46 வயதான அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், சதார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் நிறுவனத்தின் சார்பாக பயிற்சிக்காக குருகிராமிற்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில், நீரில் மூழ்கிய சம்பவம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து,  சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, ஏப்ரல் 5 ஆம் தேதி, அவரது கணவர் குருகிராமில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மனைவியை அனுமதித்தார். ஏப்ரல் 13 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நடந்தது என்ன?

 புகாரின்படி "சிகிச்சையின் போது, ​​ஏப்ரல் 6 ஆம் தேதி தான் வென்டிலேட்டரில் இருந்தேன். அப்போது மருத்துவமனையின் சில ஊழியர்கள் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், வென்டிலேட்டரில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை, மிகவும் பயந்திருந்தேன். சம்பவத்தின் போது நான் மயக்க நிலையில் இருந்தேன். மேலும் இரண்டு செவிலியர்களும் என்னைச்  சுற்றி இருந்தனர்," என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக  அந்த பெண் கணவரிடம் கூறியதும், அவர் அளித்த ஒத்துழைப்பின் பேரில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். உயிரை காக்கும் மருத்துவமனையில் நோயாளிக்கே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை:

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, குருகிராமில் உள்ள சதார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண, பணி அட்டவணையை ஸ்கேன் செய்யவும், சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் பணிகளையும் போலீஸ் குழு போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் நீதிபதி முன்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். விரைவில் குற்றவாளிகள்  அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த விஷயம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்களைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது விளக்கமளித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget