மேலும் அறிய

Cryptocurrency Regulation Explained | கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் எப்படி அணுகுகின்றன? இந்தியாவுக்கான சவால்கள் என்னென்ன?

சில கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை சோதனைகளுக்குப் பிறகு, கிரிப்டோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த வழியைக் கண்டறியும் செயல்பாட்டில் உள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தனது பணிப்பட்டியல் குறித்த தகவல்களை செவ்வாயன்று மக்களவை வெளியிட்டது. இந்த பணிப்பட்டியலில், 26 மசோத்தாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அடங்கும். இந்த மசோதாவுக்கு, கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவை தனது பணிப்பட்டியலில் கூறியுள்ளது. கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன. 'பிட்காயின்' 17 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'எத்திரியம்' 15 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'டெதர்' 18 சதவீதத்திற்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு RBI தடைவிதித்தது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும்' அரசு, ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி மற்றும் அதன் புழக்கம் தொடர்பான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது. இந்த நாணயம் இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது அரசின் எதிர்கால முடிவு குறித்த தொலைநோக்குபார்வை நிர்ணயிப்பதாக இருக்கும். எத்தனை இந்தியர்கள் கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எந்த வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில் நாடுகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் நிலைப்பாடு, இந்த நிதிச் சொத்துக்கள் மீதான மொத்தத் தடை, சில விதிமுறைகளுடன் செயல்பட அனுமதிப்பது, மெய்நிகர் நாணய வர்த்தகத்தை அனுமதிப்பது என்று ஒவ்வொரு நாடுகளும் இந்த மெய்நிகர் நாணயத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அரசாங்கங்களும் கட்டுப்பாட்டாளர்களும் அதை எவ்வாறு நாணயம் அல்லது சொத்து என வகைப்படுத்துவது மற்றும் செயல்பாட்டுக் கண்ணோட்டத்தில் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் வெவ்வேறு கருத்துகள் கொண்டுள்ளனர். கொள்கை மற்றும் ஒழுங்குமுறை பதிலின் பரிணாமம், நாடுகளின் பதில்களில் வெளிப்படையான ஒருங்கிணைப்பு இல்லாமல், இயல்புக்கு மாறானதாக உள்ளது.

எல் சால்வடார் போன்ற நாடுகளில் காணப்படும் முழுமையான வெளிப்படைத்தன்மையிலிருந்து, கிரிப்டோகரன்சிகள் மற்றும் சேவை வழங்குநர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீனாவைப் போன்று, பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரித்தது வரை, ஒழுங்குமுறை மற்றும் கொள்கைப் பிரதிபலிப்பு எல்லா நாடுகளுக்கும் மாறுபடும். இதில் இந்தியா போன்ற நாடுகளும் உள்ளன, இன்னும் சில கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை சோதனைகளுக்குப் பிறகு கிரிப்டோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த வழியைக் கண்டறியும் செயல்பாட்டில் உள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விவாதங்கள் தொடரும் அதே வேளையில், ஒழுங்குமுறை ஆணையைக் குறைக்கும் முயற்சியில் முனைப்புடன் உள்ளன. விரிவான விதிமுறைகளை வெளியிடாத நாடுகளில், இந்த நாணயங்களை அங்கீகரித்து வரையறுத்த நாடுகளும் உள்ளன.

எடுத்துக்காட்டாக, கனடா அதன் குற்றச் செயல்கள் (பணமோசடி) மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு விதிமுறைகள் மூலம் மெய்நிகர் நாணயத்தை, "​​ஒரு நாணயம் அல்லாத பணம் அல்லது முதலீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய மதிப்பின் டிஜிட்டல் பிரதிநிதித்துவம் மற்றும் அது நிதிகளுக்காக உடனடியாகப் பரிமாறிக்கொள்ளக்கூடிய மற்றொரு மெய்நிகர் நாணயம் அல்லது பண மதிப்பின் டிஜிட்டல் பிரதிநிதித்துவத்தை அணுக ஒரு நபர் அல்லது நிறுவனத்தை செயல்படுத்தும் கிரிப்டோகிராஃபிக் அமைப்பின் தனிப்பட்ட விசை." என்று வரையறுக்கிறது. இந்த ஆண்.டு ஜூன் மாதம் ஒரு தனியார் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை, கிரிப்டோவை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொண்ட நாடுகளில் கனடாவும் இருப்பதாகக் குறிப்பிட்டது, மேலும் கனடா வருவாய் ஆணையம் (CRA) பொதுவாக நாட்டின் வருமான வரிச்சட்டத்தின் நோக்கங்களுக்காக கிரிப்டோகரன்சியை ஒரு பொருளாகக் கருதுகிறது.

Cryptocurrency Regulation Explained | கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் எப்படி அணுகுகின்றன? இந்தியாவுக்கான சவால்கள் என்னென்ன?

இஸ்ரேல், நிதிச்சேவைகள் சட்டத்தின் மேற்பார்வையில், நிதிச் சொத்துகளின் வரையறையில், மெய்நிகர் நாணயங்களை உள்ளடக்கியது. இஸ்ரேலிய செக்யூரிட்டி ரெகுலேட்டர் 'கிரிப்டோகரன்சி' ஒரு பாதுகாப்பு பொருள் என்று தீர்ப்பளித்தது, அதே நேரத்தில் இஸ்ரேல் வரி ஆணையம் கிரிப்டோகரன்சியை ஒரு சொத்தாக வரையறுத்து மூலதன ஆதாயத்தில் 25% கோருகிறது.

ஜெர்மனியில், நிதி மேற்பார்வை ஆணையம் மெய்நிகர் நாணயங்களை "கணக்கின் அலகுகள்" மற்றும் "நிதி கருவிகள்" என தகுதிப்படுத்துகிறது. Bundesbank Bitcoin ஒரு கிரிப்டோ டோக்கன் என்று கருதுகிறது, ஏனெனில் அது நாணயத்தின் வழக்கமான செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. இருப்பினும், குடிமக்களும் சட்டப்பூர்வ நிறுவனங்களும் கிரிப்டோ சொத்துக்களை வாங்கலாம் அல்லது வர்த்தகம் செய்யலாம், அதை பரிமாற்றங்கள் மற்றும் ஜெர்மன் ஃபெடரல் ஃபைனான்சியல் மேற்பார்வை ஆணையத்தில் உரிமம் பெற்ற பாதுகாவலர்கள் மூலம் செய்யலாம்.

யுனைடெட் கிங்டம்-இல், ஹெர் மெஜஸ்டியின் வருவாய் மற்றும் சுங்கம், கிரிப்டோ சொத்துக்களை நாணயமாகவோ அல்லது பணமாகவோ கருதவில்லை, கிரிப்டோகரன்சிகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது, எனவே, வேறு எந்த வகையான முதலீட்டு செயல்பாடு அல்லது கட்டண முறையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது.

யுனைடெட் ஸ்டேட்ஸ்-இல், வெவ்வேறு மாநிலங்களில் கிரிப்டோகரன்ஸிகளுக்கு வெவ்வேறு வரையறைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. மத்திய அமெரிக்க அரசு கிரிப்டோகரன்ஸிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், மாநிலங்களால் வழங்கப்பட்ட வரையறைகள் மெய்நிகர் நாணயங்களின் பரவலாக்கப்பட்ட தன்மையை அங்கீகரிக்கிறது.

தாய்லாந்து-இல், டிஜிட்டல் சொத்து வணிகங்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கண்காணிக்க வேண்டும், மேலும் பணமோசடி எதிர்ப்பு நோக்கங்களுக்காக "நிதி நிறுவனங்களாக" கருதப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில், தாய்லாந்தின் பழமையான கடன் வழங்குநரான சியாம் கமர்ஷியல் வங்கி, உள்ளூர் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் பிட்குப் ஆன்லைனில் 51% பங்குகளை வாங்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தது.

Cryptocurrency Regulation Explained | கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் எப்படி அணுகுகின்றன? இந்தியாவுக்கான சவால்கள் என்னென்ன?

இந்த நாடுகளில் பெரும்பாலானவை கிரிப்டோகரன்ஸிகளை சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த டிஜிட்டல் யூனிட்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பை அவை அங்கீகரிக்கின்றன. மேலும் அவற்றின் செயல்பாடுகளை பரிமாற்ற ஊடகம், கணக்கு அலகு அல்லது மதிப்பின் சேகரிப்பில் வைத்துள்ளனர். இந்தியாவைப் போலவே, பல நாடுகளும் தங்கள் மத்திய வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த நகர்ந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி தனது CBDC ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஃபியட் நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும், இது பிளாக்செயின் ஆதரவுடன் மணி பேக்கை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியும், இது மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. CBDC களின் கருத்து பிட்காயினால் நேரடியாக ஈர்க்கப்பட்டாலும், இது மாநிலத்தால் வழங்கப்படாத பரவலாக்கப்பட்ட மெய்நிகர் நாணயங்கள் மற்றும் கிரிப்டோ சொத்துக்களிலிருந்து வேறுபட்டது மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'சட்டபூர்வமான டெண்டர்' அந்தஸ்து இல்லாதது.

மூன்றாம் தரப்பினர் அல்லது வங்கி தேவையில்லாத உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள CBDC கள் பயனருக்கு உதவுகின்றன. பல நாடுகள் இந்த இடத்தில் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருவதால், இந்தியா தனது சொந்த CBDC ஐ அறிமுகப்படுத்துவது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சர்வதேச நிதிச் சந்தைகளில் ரூபாய்க்கு போட்டியாக இருக்கும். CBDC ஆனது டிஜிட்டல் அல்லது மெய்நிகர் நாணயமாக இருந்தாலும், கடந்த தசாப்தத்தில் காளான்கள் போல பரபரவென வளர்ந்த தனியார் மெய்நிகர் நாணயங்களுடன் ஒப்பிட முடியாது. தனியார் மெய்நிகர் நாணயங்கள் பணத்தின் வரலாற்றுக் கருத்துடன் முரண்படுகின்றன. மேலும் இந்த வார்த்தைகள் வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ளப்பட்டதால் அவை நிச்சயமாக நாணயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
பிராணயாமம் வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஒரு தினசரி பயிற்சி- பாபா ராம்தேவ்
பிராணயாமம் வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஒரு தினசரி பயிற்சி- பாபா ராம்தேவ்
யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல.. மனம் மற்றும் சுவாசத்தை இணைக்கிறது - சுவாமி ராம்தேவ் அட்வைஸ்
யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல.. மனம் மற்றும் சுவாசத்தை இணைக்கிறது - சுவாமி ராம்தேவ் அட்வைஸ்
Gold Rate Today: ஒரே நாளில் ரூ.2400 உயர்வு.! தங்கம், வெள்ளி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த விலை
ஒரே நாளில் ரூ.2400 உயர்வு.! தங்கம், வெள்ளி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த விலை
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget