மேலும் அறிய

காட்டுப்பன்றியின் அட்டகாசம்.. - கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்... கண்ணீர் சிந்தும் விவசாயிகள்... 

சீர்காழி அருகே சம்பா நெற்பயிர்களை, இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதார பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதியாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அகணி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்களை, இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் முற்றிலும் நாசம் செய்து அழித்து வருகின்றன. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், மிகுந்த மன உளைச்சலில் ஆளாகியுள்ளதால், காட்டுப் பன்றிகளை உடனடியாகச் சுட்டுப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வாதாரத்திற்கான போராட்டம்

அகணி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி விவசாயிகள், முப்போகம் விளைவித்த பகுதியிலிருந்து தற்போது ஒருபோகத்திற்குக் கூட வழி இல்லாமல் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

இயற்கை இடர்பாடுகளான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றை எதிர்கொண்டு, பலமுறை அழிவைச் சந்தித்தாலும், விவசாயத்தை விட முடியாமல், கடன்களைப் பெற்று மீண்டும் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

காட்டுப் பன்றிகளின் அட்டகாசம்

இயற்கை இடர்பாடுகளில் இருந்து சற்று மீண்டு வந்த நிலையில், தற்போது இந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் உள்ளது. அகணி கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்களில் இரவு நேரங்களில் கூட்டமாகப் புகும் காட்டுப் பன்றிகள், தற்போது விளைச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சம்பா நெற்பயிர்களை வேரோடு பிடுங்கியும், மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக சுமார் 50 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகள், தங்கள் குடும்ப வருமானத்திற்காகச் செய்த ஒட்டுமொத்தப் பயிரும் ஒரே இரவில் அழிந்து போனதால், பெரும் பாதிப்புக்குள்ளாகி, எதிர்காலம் குறித்த பயத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசின் மெத்தனப் போக்கிற்குக் கண்டனம்

காட்டுப் பன்றிகளின் இந்தத் தொடர் சேதத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்விதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

"நாங்கள் கடன் வாங்கி, இரவு பகல் பாராமல் உழைத்த பயிர்கள் அனைத்தும் கண்முன்னே அழிந்து போகிறது. தொடர்ந்து புகார் அளித்தும் வனத்துறை இதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. எங்கள் வாழ்வாதாரம் நாசமாவது அவர்களுக்குத் தெரியவில்லை," என்று வேதனை தெரிவித்தனர்.

தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை

தற்போதுள்ள சூழலில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், ஒரே ஒரு தீர்வு மட்டுமே தங்களுக்கு உள்ளது என்று நம்புகின்றனர்.

உடனடியாகத் தமிழக அரசு, விவசாயத்தைப் பிரதான தொழிலாக வைத்துள்ள அகணி கிராம விவசாயிகளின் துயரத்தைப் போக்க, காட்டுப் பன்றிகளைச் சுட்டுப் பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவே பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், எதிர்காலப் பயிர்களைப் பாதுகாக்கவும் ஒரே வழி என அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், காட்டுப் பன்றிகளால் நாசமடைந்த 50 ஏக்கர் சம்பா நெற்பயிர்களைப் பற்றி உடனடியாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான அகணி கிராமத்தில், காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பயிர்ச் சேதம் விவசாயிகளைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடன் சுமை மற்றும் வாழ்வாதார அச்சுறுத்தலில் சிக்கியுள்ள இவர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்று, உடனடியாக காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
திடீர் மாற்றம்... உப்பு தன்மையுடன் தண்ணீர்: சாகுபடி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கண்ணீர்
திடீர் மாற்றம்... உப்பு தன்மையுடன் தண்ணீர்: சாகுபடி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கண்ணீர்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget