மேலும் அறிய

ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மற்றும் மூட்டைகள் நகர்வு பணிகள் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை: தமிழகத்தில் நடப்பு சம்பா பருவ நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகளை கிட்டங்கிகளுக்கு நகர்த்தும் பணிகள் குறித்து உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.

சாதனை அளவிலான கொள்முதல் விவரங்கள்

கூட்டத்தில் பேசிய நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, நடப்பு 2025-2026 கொள்முதல் பருவத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளைப் பட்டியலிட்டார்.

அவர் கூறியதாவது:

“தமிழக முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையால், பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் புதிய விலையில் நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக, கடந்த செப்டம்பர் 1-ம் தேதியே கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டன.

மார்ச் 10, 2026 வரை மாநிலம் முழுவதும் 3,496 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 34.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (23.56 லட்சம் மெ.டன்) ஒப்பிடுகையில் 11 இலட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.”

மயிலாடுதுறை மாவட்ட நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் மொத்தம் 1,30,960 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 81 சதவீதப் பணிகள் (1,06,047 ஹெக்டேர்) நிறைவடைந்துள்ளன. மாவட்டத்தில் இதுவரை 1.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள அறுவடைப் பகுதிகளில் இருந்து கூடுதலாக 1.06 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி கொள்முதல் அளவை அதிகரிக்கவும், விவசாயிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* நேரம் அதிகரிப்பு: கொள்முதல் நிலையங்கள் செயல்படும் நேரம் இரவு 8.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* அளவு உயர்வு: ஒரு ஏக்கருக்கு 70 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

* கூடுதல் இயந்திரங்கள்: 9 மாவட்டங்களில் உள்ள 110 நிலையங்களில் கூடுதல் இயந்திரங்கள் மூலம் தினசரி 1000 மூட்டைகளுக்கும் மேல் கொள்முதல் செய்யப்படுகிறது.

பாதுகாப்பான சேமிப்பு மற்றும் துரித நகர்வு

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் இருக்க, தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இயக்குநர் விளக்கினார். 2022 முதல் 2026 ஜனவரி வரை, 18 மாவட்டங்களில் ரூ. 825.79 கோடி மதிப்பீட்டில் 383 நவீன நெல் சேமிப்பு தளங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் ரூ. 331.08 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 253 தளங்கள் ஏற்கனவே முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கொள்முதல் செய்யப்பட்ட 34.50 லட்சம் மெட்ரிக் டன்களில், 29.30 லட்சம் மெட்ரிக் டன்கள் ஏற்கனவே கிட்டங்கிகளுக்கு நகர்த்தப்பட்டுவிட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் தினசரி 300 லாரிகள் மூலம் 3000 மெட்ரிக் டன் நெல் நகர்வு செய்யப்பட்டு வருகிறது.

இருப்பு விபரங்கள்:

* டெல்டா மாவட்டங்களில் 1.42 கோடி சாக்குகள், 303 மெட்ரிக் டன் சணல் மற்றும் 27,610 தார்ப்பாய்கள் தயாராக உள்ளன.

* மாநில அளவில் 3.03 கோடி சாக்குகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

நேரடி கள ஆய்வு

ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, நிர்வாக இயக்குநர் ஆ. அண்ணாதுரை திருவிளையாட்டம், மன்னம்பந்தல், பெருஞ்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும், திறந்தவெளி சேமிப்பு மையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள ஈரப்பதம் காட்டும் கருவிகள், விவசாயிகளின் பதிவேடுகள் மற்றும் மூட்டைகளை நகர்த்தும் லாரிகளின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை

தமிழகம் முழுவதும் இதுவரை 4,02,971 விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகளில் ரூ. 8,716 கோடி தொகை நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. "ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் கா. நளினா, வேளாண்மை துறை இணை இயக்குநர் விஜயராகவன், வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
அவர் என்ன தண்டி யாத்திரையா சென்றார்? - காங்கிரஸ் எம்பியை கடுமையாக விமர்சித்த உடன்பிறப்பு...!
அவர் என்ன தண்டி யாத்திரையா சென்றார்? - காங்கிரஸ் எம்பியை கடுமையாக விமர்சித்த உடன்பிறப்பு...!
மயிலாடுதுறையில் ‘கை’ கொடுத்தவருக்கே ‘கை’ காட்டும் காங்கிரஸார்.. சொந்தக் கட்சி எம்பி-க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
மயிலாடுதுறையில் ‘கை’ கொடுத்தவருக்கே ‘கை’ காட்டும் காங்கிரஸார்.. சொந்தக் கட்சி எம்பி-க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
சசிகலா கட்சி வேட்பாளரின் காரில் 5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்: சீர்காழியில் வேட்புமனு தாக்கலின் போது பரபரப்பு!
சசிகலா கட்சி வேட்பாளரின் காரில் 5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்: சீர்காழியில் வேட்புமனு தாக்கலின் போது பரபரப்பு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget