மேலும் அறிய

விளாத்திகுளம், புதூர் பகுதி மிளகாய் வற்றல்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன்கள் அமைக்க கோரிக்கை

கரிசல் பூமியில் விளைவிக்கப்படும் முண்டு வத்தலுக்கு இலங்கையில் நல்ல மவுசு இருந்தது. தற்போது அந்நாட்டில் சூழ்நிலை சரியில்லாததால் ஏற்றுமதி இல்லை.

இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால் விளாத்திகுளம் பகுதியில் சுமார் 200 மூடை முண்டு வத்தல் தேங்கி கிடக்கிறது. நல்ல விலை கிடைப்பதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


விளாத்திகுளம், புதூர் பகுதி மிளகாய் வற்றல்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன்கள் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், அரியநாயகிபுரம், சிவஞானபுரம், சூரங்குடி, குமராபுரம், ராமசந்திரபுரம் ஆகிய பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கம்பு, பாசி, உளுந்து, சின்ன வெங்காயம், மக்காச்சோளம், மிளகாய், கொத்தமல்லி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதில், விளாத்திகுளம், புதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகாய் வத்தல் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் நீளச்சம்பா மிளகாயைவிட முண்டு மிளகாய் தான் அதிகமா சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு சுமார் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். இலங்கை நாட்டில் முண்டு வத்தலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால் இங்கிருந்து இலங்கைக்கு முண்டு வத்தல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


விளாத்திகுளம், புதூர் பகுதி மிளகாய் வற்றல்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன்கள் அமைக்க கோரிக்கை

இந்நிலையில், இந்தாண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக முண்டு வத்தல் விளைச்சல் குறைவாக இருந்தது. ஆனால், தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் ரூ.30 ஆயிரம் வரை விலை இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல விலை குறைந்து ஒரு குவிண்டால் சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு தான் வாங்கப்படுகிறது. மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கலவரம் காரணமாக முண்டு வத்தல் ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், நல்ல விலை கிடைக்கும் வரை விளாத்திகுளம், புதூர் பகுதியில் மகசூல் எடுக்கப்பட்ட சுமார் 200 மூட்டைகளில் கிட்டங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன.
விளாத்திகுளம், புதூர் பகுதி மிளகாய் வற்றல்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன்கள் அமைக்க கோரிக்கை

இதுகுறித்து சிங்கிலிபட்டியை சேர்ந்த விவசாயி செல்வகுமாரிடம் கேட்டபோது, கடந்தாண்டை போலவே இந்தாண்டு அதிகளவு மழை பெய்து, வத்தல் விளைச்சலை பாதித்துவிட்டது. அதேநேரத்தில் கடந்தாண்டை போல் இல்லாமல் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு குவிண்டால் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. அதன் பின்னர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வத்தல் வருகை காரணமாக உள்ளூர் வத்தலின் விலை ஒரு குவிண்டால் ரூ.20 ஆயிரம் என ஆகிவிட்டது.


விளாத்திகுளம், புதூர் பகுதி மிளகாய் வற்றல்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன்கள் அமைக்க கோரிக்கை

எங்களுக்கு எப்போது கைகொடுப்பது ஏற்றுமதி தான். கரிசல் பூமியில் விளைவிக்கப்படும் முண்டு வத்தலுக்கு இலங்கையில் நல்ல மவுசு இருந்தது. தற்போது அந்நாட்டில் சூழ்நிலை சரியில்லாததால் ஏற்றுமதி இல்லை. இங்கும் விலை கிடைக்கவில்லை. இதனால் நல்ல விலை வரும் வரை சூரங்குடி, தூத்துக்குடியில் உள்ள தனியார் கிட்டங்கிகளில் சுமார் 200 மூட்டைகளில் முண்டு வத்தல் வைத்துள்ளோம்.ஒரு மூட்டையில் 19 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ.4 ஆயிரம் என்றால், சுமார் ரூ.80 கோடி வரை முண்டு வத்தல் விற்பனையாகாமல் எங்களிடமே தேங்கி உள்ளது.

ஏற்கெனவே, விவசாயத்துக்கு செலவு செய்த நிலையில், தற்போது முண்டு வத்தலை பாதுகாக்கவும் செலவு செய்து வருகிறது. இதனால் எங்களது செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலன் கருதியும் முண்டு வத்தல் பாதுகாத்து நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் அரசு சார்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தலைப்பு செய்திகள்

மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!
மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
Embed widget