மேலும் அறிய

சீர்காழி அருகே விவசாயிகள் போராட்டம்: கருகும் பயிர்கள், கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்குமா நீர்வளத்துறை..?

நான்கு வழிச்சாலை பணிக்காக பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழியின்றி 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பாதரக்குடி, விளந்திட சமுத்திரம், சேந்தங்குடி ஆகிய கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான குறுவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டு தூர்ந்துபோனதே இதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி, கருகி வரும் தங்களது வயல்களில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறுவைப் பயிர்களுக்குக் காத்திருக்கும் பேராபத்து

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதரக்குடி, விளந்திட சமுத்திரம், சேந்தங்குடி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் குறுவைப் பயிர்கள் தற்போது கதிர் வரும் நிலையில் உள்ளன. இது விவசாயிகள் மகசூல் பெறும் முக்கியமான காலகட்டம். ஆனால், இந்த நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான நீர்வரத்து இல்லாததால், வயல்கள் வெடிப்புற்று, பயிர்கள் காய்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


சீர்காழி அருகே விவசாயிகள் போராட்டம்: கருகும் பயிர்கள், கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்குமா நீர்வளத்துறை..?

பாசன வாய்க்கால்களின் அவல நிலை

குறுவைப் பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காததற்குக் காரணம், அப்பகுதியில் உள்ள பழவாரிலிருந்து பிரியும் கிளைப் பாசன வாய்க்காலான தெற்குவெளி மற்றும் வடக்குவெளி பாசன வாய்க்கால்களில் நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனதுதான். இதற்கு முக்கிய காரணமாக, நாகை-விழுப்புரம் நான்கு வழி சாலைப் பணிகளுக்காக தனியார் நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளே கூறப்படுகிறது. சாலைப் பணிகளின்போது, கனரக வாகனங்கள் சென்று வர வசதியாக பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டு தூர்ந்துபோனதுதான் இந்த நிலைக்குக் காரணம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும், தண்ணீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுவிட்டன. இதனால், மழைநீர் மற்றும் ஆற்று நீர்வரத்து இருந்தபோதிலும், அது விவசாய நிலங்களைச் சென்றடையவில்லை.


சீர்காழி அருகே விவசாயிகள் போராட்டம்: கருகும் பயிர்கள், கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்குமா நீர்வளத்துறை..?

கருகும் பயிர்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

தங்கள் கண்முன்னே கடின உழைப்பால் பயிரிட்ட குறுவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதைக் கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். "கதிர் வரும் நிலையில் உள்ள பயிர்களுக்கு இப்போது தண்ணீர் இல்லையென்றால், அத்தனையும் பாழாகிவிடும். எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்" என்று ஒரு விவசாயி கண்ணீருடன் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருவதால், எதிர்காலம் குறித்த பயம் அவர்களை வாட்டி வதைக்கிறது.


சீர்காழி அருகே விவசாயிகள் போராட்டம்: கருகும் பயிர்கள், கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்குமா நீர்வளத்துறை..?

வயலில் இறங்கி திடீர் போராட்டம்

தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிசாய்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று கருகிவரும் தங்களது வயல்களில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை உடனடியாகத் தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற நீர்வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


சீர்காழி அருகே விவசாயிகள் போராட்டம்: கருகும் பயிர்கள், கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்குமா நீர்வளத்துறை..?

நீர்வளத்துறைக்குக் கோரிக்கை

விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, தூர்ந்துபோன பாசன வாய்க்கால்களைத் தூர்வாரி, பயிர்களுக்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாதவாறு, பாசன வாய்க்கால்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
Double Decker Bus: சுற்றுலா தளங்களை டபுள் டக்கர் பஸ்சில் சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்.!எந்த ரூட்.? எவ்வளவு கட்டணம்.?
சுற்றுலா தளங்களை டபுள் டக்கர் பஸ்சில் சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்.! எந்த ரூட்.? எவ்வளவு கட்டணம்.?
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Embed widget