கஞ்சா போதை..கையில் கத்திவிரட்டி விரட்டி வெட்டிய ரவுடி!நடுங்க வைக்கும் CCTV காட்சி பட்டப்பகலில் பயங்கரம்! | Murder News |
அஜித்குமார் ஐரோப்பாவில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற கிரென்டிக் 24 எச் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. அஜித்குமார் அணி பங்கேற்கும் கார் பந்தயங்களில் அனைத்தும் போடியத்தில் இடம்பிடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து, அஜித்குமாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும் அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! இவ்வாறு அந்த பதைவில் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் விஜய் மீதும் தவெக மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும், தவெக-வையும், விஜய்யையும் திமுக கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.





















