மேலும் அறிய

Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் என நடிகர் சூர்யா விமர்சித்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

 

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.
விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.


கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள், அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

 

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாரயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

 

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.
அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிராத்தனை” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu: கருப்பு எனும் நெருப்பு.. சுத்தி சுத்தி பாசிட்டிவ் ரிவியூ! சூர்யா ரசிகர்கள் படுகுஷி!
Karuppu: கருப்பு எனும் நெருப்பு.. சுத்தி சுத்தி பாசிட்டிவ் ரிவியூ! சூர்யா ரசிகர்கள் படுகுஷி!
Karthigai Deepam: கீழ்த்தரமா நடந்துகிட்டீங்க... மாமியாரை தலைகுனிய வைத்த மாப்பிள்ளை கார்த்திக்
Karthigai Deepam: கீழ்த்தரமா நடந்துகிட்டீங்க... மாமியாரை தலைகுனிய வைத்த மாப்பிள்ளை கார்த்திக்
சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!
சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!

வீடியோ

’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!
Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
PM Modi UAE Visit: UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
Gold Silver Rate May 15th: ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
TN TVK Cabinet : 8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
Embed widget