மேலும் அறிய

தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்! அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, தேக்கடி ஏரியில் சுற்றுலா படகு சவாரி மீண்டும் துவக்கம். அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியிலும் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு தினந்தோறும், பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் இங்குள்ள ஏரியில், படகு சவாரி மூலம் வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கையை கண்டு ரசிப்பது வழக்கம். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கேரளாவின் பெயர் இல்லாமல் இருக்காது. சீசன் நேரங்களில் மட்டுமல்லாமல் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் அழகை ரசிக்க எல்லா காலகட்டங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரியார் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள தேக்கடி ஏரியும் கேரளாவின் அழகிய இடங்களில் ஒன்று. 


தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்! அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். படகு சவாரி செய்ய கேரள வனத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 14 கி.மீ தூரம் சென்று திரும்பும் வனத்துறை படகு சவாரிக்கு கட்டணமாக ரூ.255, சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு சவாரிக்கு ரூ.450 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. காலை 7.30, 9.30, 11.15 மணி மற்றும் பிற்பகல் 1.45, 3.30 மணி என ஐந்து டிரிப்புகளில் படகுகள் இயக்கப்படுகின்றன.


தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்! அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

இந்த நிலையில் கடந்த மே 24ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமானதை அடுத்து, இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மே 27ம் தேதி வரை தேக்கடியில் படகு சவாரிக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும் தொடர்ந்து ஏரி பகுதியில் மழை பெய்து வந்ததால் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேக்கடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் முதல் மீண்டும் சுற்றுலா படகு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.

இதேபோல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாபயணியருக்கு மீண்டும் அனுமதி வழங்கியதால், இருமாநில சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இருமாநில சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் வரை சுற்றுலாபயணியர் அங்குள்ள அருவில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் கடந்த மாதம், 26ம் தேதி முதல் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.


தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்! அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்ததால், அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இருமாநில சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சாலக்குடி வனத்துறை வட்டாரத்தில் கூறுகையில் கேரளாவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வந்ததால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின் அவசரமா? போர்டிங் பாயிண்ட் மாற்றுவது எப்படி? IRCTC-யின் சூப்பர் வசதி!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
தென் மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! மதுரை வழியாக மங்களூரு செல்லும் புதிய ரயில்கள்: முழு விபரம் இதோ!
தென் மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! மதுரை வழியாக மங்களூரு செல்லும் புதிய ரயில்கள்: முழு விபரம் இதோ!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் தேர்தல் அப்டேட்!
DMK alliance : திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Embed widget