மேலும் அறிய

150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலாடுதுறை ரயில் சந்திப்பிலிருந்து காரைக்குடிக்கு நேரடி ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை: டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை - காரைக்குடி இடையேயான நேரடி ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை திருச்சிராப்பள்ளியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார். மீண்டும் நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரலாற்றுப் பின்னணியும் ரயில்வே சந்திப்பும்

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு என்பது சாதாரணமான ஒன்றல்ல; இது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, சுமார் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாகும். ஆரம்ப காலத்தில் இப்பாதைகள் 'மீட்டர் கேஜ்' (Meter Gauge) ஆக இருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளும் நேரடி ரயில்கள் இயக்கப்பட்டன. இது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்துத் தடமாக விளங்கியது.

இருப்பினும், ரயில்வே நிர்வாகம் மீட்டர் கேஜ் பாதைகளை 'அகல ரயில் பாதை'யாக (Broad Gauge) மாற்றும் பணிகளைத் தொடங்கியபோது, இந்த நேரடி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு, காலையில் மட்டும் ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2024-ம் ஆண்டு அந்தச் சேவையும் நிறுத்தப்பட்டு, காரைக்குடி ரயிலானது திருவாரூரில் இருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் மயிலாடுதுறை பகுதி பயணிகள் காரைக்குடி செல்ல திருவாரூர் சென்று அங்கிருந்து ரயில் மாற வேண்டிய சூழல் நிலவியது.

பிரதமர் தொடங்கி வைத்த கோலாகல விழா

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் மயிலாடுதுறை - காரைக்குடி நேரடி ரயில் சேவைக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுடன் சேர்த்து இந்த புதிய ரயில் சேவையையும் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், ரயில்வே உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பிரதமர் கொடியசைத்தவுடன், அலங்கரிக்கப்பட்ட ரயில் மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து புறப்பட்டது.

தேசியக் கொடியுடன் உற்சாகப் பயணம் செய்த மாணவர்கள்

இந்தத் தொடக்க விழாவின் சிறப்பம்சமாக, பள்ளி மாணவ-மாணவிகள் பெருமளவில் இந்த ரயிலில் பயணித்தனர். ரயிலின் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்திருந்த குழந்தைகள், கைகளில் தேசியக் கொடியை ஏந்தி "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட்டபடி உற்சாகமாகச் சென்றனர். ரயிலின் உட்புறம் வண்ண மலர்களாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் ஊரிலிருந்து காரைக்குடிக்கு நேரடி ரயில் செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள் மலர்களைத் தூவி ரயிலை வரவேற்றனர்.

ரயில் கால அட்டவணை மற்றும் விவரங்கள்

புதிய அட்டவணையின்படி, இந்த ரயில் (எண்: 56836/56835) மயிலாடுதுறை மற்றும் காரைக்குடி இடையே தினமும் இயக்கப்படவுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

56836 - காரைக்குடியில்காலை 6.15 புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 10.40 - க்கு வந்தடையும்.

56835 - மயிலாடுதுறையில் மாலை 5.10 புறப்பட்டு காரைக்குடி இரவு 9.15 சென்றடையும்.

இந்த ரயிலானது பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடியைச் சென்றடையும்.

பயணிகள் சங்கத்தின் கோரிக்கையும் மகிழ்ச்சியும்

நேரடி ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில்:

"மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு நேரடி ரயில் சேவை என்பது வணிக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிக முக்கியமான ஒன்று. தற்போது மாலை நேரத்தில் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு ரயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இது தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பெரிய உதவியாக இருக்கும்."

இருப்பினும், பழைய மீட்டர் கேஜ் காலத்தில் இருந்தது போல, காலை நேரத்திலும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு ஒரு நேரடி ரயிலை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு மேலதிக கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவையானது, காவிரி டெல்டா மாவட்ட மக்களையும், செட்டிநாடு பகுதியையும் எளிதாக இணைக்கப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. இந்த ரயில் சேவையின் மூலம் உள்ளூர் சிறு குறு வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் பெரும் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
150 கால பாரம்பரியம்: மயிலாடுதுறை டூ காரைக்குடி ரயில் சேவை மீண்டும் தொடக்கம் - ரயில் பயணிகள் உற்சாகம்..!
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் சீர்காழி அரசு மருத்துவமனை: அதிருப்தியில் மக்கள்..!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
'செய்வினையை எடுக்கணும்' பெண்ணிடம் நூதன மோசடி - 20 வயது இளைஞர் கைது...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை ரூ.1200 குறைந்தது .!! வெள்ளி விலையும் இவ்வளவு சரிவா.!! இன்றைய நிலவரம் என்ன.?
தங்கம் விலை ரூ.1200 குறைந்தது .!! வெள்ளி விலையும் இவ்வளவு சரிவா.!! இன்றைய நிலவரம் என்ன.?
Embed widget