மேலும் அறிய

பயனர்களின் விவரங்களை கேட்டு பேஸ்புக்கிடம் 40300 கோரிக்கைகள் விடுத்த இந்தியா!

பயனர்களின் விவரங்களை கேட்டு 2020 பிற்பகுதியில் 40ஆயிரத்து 300 கோரிக்கைகள் இந்திய அரசிடமிருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளத்தில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். இந்நிறுவனம் இன்ஸ்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறது. சோஷியல் மீடியா என்பது வெறும் பொழுது போக்கு அம்சமாக தொடங்கப்பட்டாலும் இன்று அரசியல், வியாபாரம் என அது ஒரு தனி மீடியமாகவே செயல்படுகிறது. தேர்தல் பிரசாரம், போராட்டக்களம் என அனைத்து தரப்பிலும் தன் பங்கை பதிவு செய்கிறது சோஷியல் மீடியா. அதனால் அதற்கான கட்டுப்பாடுகளும் அரசால் விதிக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரியில் சமூக வலைதளங்களுக்கு, ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை முதலில் பதிவிட்டது யார் என்பதை அறியும் வசதி வேண்டும், அதனை 36 மணி நேரத்துக்குள் நீக்க செய்ய வேண்டும்,புகாரை விசாரிக்க ஒரு தலைமை அதிகாரி உள்பட 3 அதிகாரிகளை சோஷியல் மீடியா நிறுவனங்கள் நியமிக்க வேண்டும், அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும், நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய விதிமுறைகள் கொடுக்கப்பட்டன


பயனர்களின் விவரங்களை கேட்டு பேஸ்புக்கிடம் 40300 கோரிக்கைகள் விடுத்த இந்தியா!

இந்நிலையில் பயனர்களின் விவரங்களை கேட்டு 2020 பிற்பகுதியில் 40ஆயிரத்து 300 கோரிக்கைகள் இந்திய அரசிடமிருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி-ஜூன் வரை இந்திய அரசிடம் இருந்து 35,560 கோரிக்கைகள் வந்த நிலையில் அதன்பின் கோரிக்கைகள் 13.3% அதிகரித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று துஷ்பிரயோகம் தொடர்பாக 878 பதிவுகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது.

மொத்த கோரிக்கைகளில் 37865 கோரிக்கைகள் சட்ட நடவடிக்கை தொடர்பாகவும், 2435 கோரிக்களை உடனடி நடவடிக்கை எடுக்கக்கூறிய கோரிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளது பேஸ்புக். அரசு கோரிக்கை விடுத்தாலும் தங்களின் விதிமுறைகள் படி அரசின் ஒவ்வொரு கோரிக்கையையும் ஆராய்கிறோம். விதிமுறை, நிபந்தனைகளை மீறிய கணக்குகள் என்றால்மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க உதவுகிறோம் என பேஸ்புக் தெளிவுபடுத்தியுள்ளது



பயனர்களின் விவரங்களை கேட்டு பேஸ்புக்கிடம் 40300 கோரிக்கைகள் விடுத்த இந்தியா!

பயனர்களின் விவரங்களை கேட்டதில் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக 61262 பேரின் விவரங்களை அமெரிக்கா கேட்டுள்ளது. சர்வதேச அளவில் கணக்கிட்டால் 2020ன் தொடக்கத்தில் பேஸ்புக்கிற்கு 173592 கோரிக்கைகள் வந்துள்ளன. 2020ன் பிற்பகுதியில் 191013 கோரிக்கைகள் வந்துள்ளது. இது 10% அதிகம். அந்தந்த நாட்டின் அரசியலமைப்பு, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பேஸ்புக் நடவடிக்கை எடுத்து வருவதா அந்நிறுவனம் விளக்கியுள்ளது. 2021ஐ பொருத்தவரை சர்வதேச அளவில் நிர்வானம், பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. 


பயனர்களின் விவரங்களை கேட்டு பேஸ்புக்கிடம் 40300 கோரிக்கைகள் விடுத்த இந்தியா!

முன்னதாக, சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்த அரசு, புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி,  இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு  எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என விதிமுறைகளை விளக்கியது. இந்த விதிமுறைகளால் கருத்து சுதந்திரம் நசுக்கப்படலாம் என்றும் விமர்சனங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget