மேலும் அறிய

இந்தியா-இங்கி., 5வது டெஸ்ட் ரத்து: இரு அணிகளும் இணைந்து ஒருமித்த முடிவு! காரணம் இது தான்!

போட்டி ரத்தானதை ஐசிசி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அந்த நாட்டின் ஓல்ட் ட்ராபோர்டில் நடைபெற இருந்தது. 

இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனிலே தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழலில், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், மற்றொரு பயிற்சியாளர் யோகேஷ் பர்மர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்ப ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆர்.டி. – பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.


இந்தியா-இங்கி., 5வது டெஸ்ட் ரத்து: இரு அணிகளும் இணைந்து ஒருமித்த முடிவு! காரணம் இது தான்!

முன்னதாக, இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணியை விலகிக்கொள்ளுமாறு இங்கிலாந்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் இந்திய அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா முடிவுகள் நெகட்டிவ் என வந்ததால், போட்டி தொடங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்பட்டது.

இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி இன்றைய 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வரவில்லை என்றாலும், அங்கு வர்ணனையாளராக சென்றுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து சற்று முன் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் இன்றைய போட்டி துவங்க வாய்ப்பில்லை என கூறியிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் இன்றைய போட்டி இல்லை என உறுதியான பதிவையும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு மேலுமு் ஒரு சோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அந்த சோதனை நிறைவு பெற்ற பின் போட்டியை துவக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் மட்டுமே போட்டி ஒத்தி வைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ... இன்றைய போட்டி ரத்தாவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. 

இந்நிலையில், போட்டி ரத்து செய்ததை ஐசிசி.,யை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் இணைந்து இந்த முடிவை எட்டியுள்ளதாக ஐசிசி.,யை தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அந்த தகவலை உறுதி செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Flashback: எழுதியது வானத்தைப் போல... எடுத்தது சூர்யவம்சம்... ஜனகராஜ் கேட்டு சரத்குமார் நடித்த சூர்யவம்சம்!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget