மேலும் அறிய

Rishabh Pant: "கிரிக்கெட்டில் மீண்டும் அறிமுகமாவதுபோல உணர்கிறேன்" : ரிஷப்பண்ட் நெகிழ்ச்சி!

IPL 2024: 15 மாத இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் ஆட வரும் ரிஷப் பண்ட், மீண்டும் தான் கிரிக்கெட்டில் அறிமுகமாவது போன்ற உணர்வு இருப்பதாக உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப்பண்ட். தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும், பேட்டிங்கில் அதிரடி காட்டும் வீரராகவும் உலா வந்தவர். இவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ரிஷப்பண்ட் கடந்த ஒன்றே கால் ஆண்டுகாலமாக அதாவது 15 மாதமாக கிரிக்கெட் ஆடாமாலே இருந்து வருகிறார்.

கம்பேக் தரும் ரிஷப்பண்ட்:

இந்த நிலையில், முழு உடல் தகுதியை எட்டிய ரிஷப்பண்ட் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் ஐ.பி.எல். தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ரிஷப்பண்ட். உடற்தகுதி சான்றிதழ் பெற்றுள்ள அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக கம்பேக் தருகிறார்.

அறிமுகமாவது போல உணர்வு:

15 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட்டிற்கு திரும்பும் ரிஷப்பண்ட் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, “நான் மிகவும் உணர்ச்சிகரமாகவும், அதேசமயம் பதற்றமாகவும் இருக்கிறேன். மீண்டும் கிரிக்கெட்டில் அறிமுகமாவது போல உணர்கிறேன். நான் அனுபவித்த அனைத்திற்கும் பிறகு கிரிக்கெட் விளையாடுவது என்பது அதிசயம். எனது அனைத்து நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும், பி.சி.சி.ஐ. மற்றும் என்.சி.ஏ. ஊழியர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தங்களின் அன்பும், ஆதரவும் எனக்கு மகத்தான பலத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், ஐ.பி.எல். தொடருக்கும் திரும்புவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அணி உரிமையாளர்கள், உதவியாளர்கள் முழு ஆதரவுடன் எனக்கு பக்கபலமாக இருந்தனர். அதற்காக நான் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். எனது டெல்லி அணியுடன் இணைந்து மீண்டும் விளையாடும் நேரத்திற்காக காத்திருக்க முடியவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய வீரர்:

தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியிலும், ஐ.பி.எல். தொடரிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழும் 26 வயதே ஆன ரிஷப்பண்ட், 98 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 15 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 838 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரரான ரிஷப்பண்ட் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 271 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதத்துடன் 865 ரன்களும், 66 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 987 ரன்களும் எடுத்துள்ளார்.

ரிஷப்பண்ட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கும், டெல்லி ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலிக்கு இடம் இல்லையாமே.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

மேலும் படிக்க:IPL 2024 : ஐபிஎல்லில் முதல் ஹாட்ரிக் யார் எடுத்தது..? இந்த சாதனையை படைத்தவர்கள் எத்தனை பேர்? முழு லிஸ்ட் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Embed widget